வெள்ளி, 10 செப்டம்பர், 2010

கனடிய புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைமை அதிகாரி இலங்கை விரைகின்றார

கனடாவின் பாதுகாப்புத் துறை புலனாய்வின் முன்னாள் பணிப்பாளர் வார்ட் எல்கொக் இலங்கை வரவுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் ஜேசன் கென்னே தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகளிலிருந்து கனடாவினுள்ள நுழையும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களை தடுப்பதற்கான விடயங்களை துரிதப்படுத்தும் நோக்கில் இவர் தென்கிழக்காசிய நாடுகளின் பாதுகாப்பு பிரிவினருடன் பேசுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள த நீயுஸ் பேப்பர் எனும் கனடியப் பத்திரிகை , கனடாவினுள் நுழையும் நோக்கில் ஆழ்கடலில் அசைந்து கொண்டிருக்கக்கூடிய படகுகளின் தகவல்களையும் , கடத்தல் காரர்கள் தொடர்பான விபரங்களையும் கனடிய அதிகாரிகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றது. இத்தகவல்களின் அடிப்படையில் இவர் தனது விஜயத்தின் போது இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் செய்து சட்டவிரோத ஆட்கடத்தல் காரர்களை கைது செய்து தண்டனை வழங்க முயற்சிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: