செவ்வாய், 7 செப்டம்பர், 2010

ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்


ஜேர்மனியின் Boblingen மாவட்டத்தில் உள்ள Ehningen சந்தியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்து ஒன்றில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தமிழர்கள் 12 பேர் காயம் அடைந்துள்ளார்கள். இவர்கள் தலைநகரான பேர்லினில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவர்கள் Mercedes Sprinter ஒன்றில் பயணித்து வந்தபோது அது Mercedes truck ஒன்றுடன் மோதுண்டது. ஆயினும் Mercedes Sprinter இன் சாரதி காயம் அடையவில்லை. காயம் அடைந்த இலங்கையர்கள் 12 பேரும் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். Mercedes truck பயணித்தவரும் காயம் அடைந்துள்ளார். காயம் அடைந்தவர்களை மீட்கின்றமைக்கு சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை எடுத்திருக்கின்றது. காயப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஹெலிகொப்டர் ஒன்றும் ஈடுபட்டது.

கருத்துகள் இல்லை: