சனி, 16 ஜூலை, 2011

புலி ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்கு,இமானுவல் பெயரும் இந்த பட்டியலில்

புலி ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஐந்து நிறுவனங்களைச் சேர்ந்த 20 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபர்கள் பற்றிய தகவல்கள் குற்ற விசாரணைப் பிரிவினரிடம் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குளோபல் தமிழ் போரம் அமைப்பின் தலைவர் வணக்கத்திற்குரிய இமானுவல் அடிகளாரின் பெயரும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: