சனி, 16 ஜூலை, 2011

தி.மு.க., செல்லாக்காசு : இளங்கோவன்.அதிமுக வில் சேர போகிறாரா?

தி.மு.க..வுடன் கூட்டணி தொடர்ந்தால் உள்ளாட்சி தேர்தலில் காங்., ஜெயிக்க முடியாது. ஏனெனில், தி.மு.க., செல்வாக்கற்ற கட்சியாக, செல்லாக்காசாக போய்விட்டது'' என, காங்., முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கடுமையாக விமர்சித்தார்.

தூத்துக்குடியில் நேற்று அவர் கூறியதாவது: கடந்த சில ஆண்டாக தமிழக அரசு உத்தரவுப்படி பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்கப்பட்டது. ஆனால், அவரது பிறந்த நாளான இன்று(நேற்று) அதுபோல கடைபிடிக்கவில்லை. நிதி ஒதுக்காததுதான் இதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. இதுவருந்தத்தக்கது. எனவே, கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட அரசு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காத அதிகாரிகள் மீது முதல்வர் ஜெ., நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நிதி ஒதுக்கி பள்ளிகளில் இதை கொண்டாட வேண்டும்.
தனித்துபோட்டியிட வேண்டும்: சட்டசபை தேர்தலுக்குமுன்னரும், தேர்தலின் போதும், தற்போதும் தி.மு.க., - காங்., கூட்டணி தொடர்கிறது. தி.மு.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என கடந்த தேர்தலின்போதே காங்., தலைமையிடம் வலியுறுத்தினோம். ராகுலிடமும் கூறினோம். கூட்டணி தொடரும் என அப்போது மேலிடம் கூறிவிட்டதால் அதன் முடிவுபடி செயல்பட்டோம். ஆனால், விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணியில்லாமல் காங்., தனித்தே போட்டியிடவேண்டுமென வலியுறுத்துகிறோம். இல்லையெனில் தி.மு.க., அல்லாத மற்றகட்சிகளுடன் கூட்டணி சேரவேண்டும் என்பது எங்களது கோரிக்கை.
செல்லாக்காசாகிவிட்டது: இந்தியாவில் ஊடகங்கள் ஆட்சிதான் நடப்பதாக தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது 100க்கு 100 உண்மைதான். அந்த "டிவி'யில்தான் சுவாமி நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருப்பதுபோல ஒளிபரப்பி அவமானப்படுத்தப்பட்டனர். தி.மு.க..வுடன் கூட்டணி தொடர்ந்தால் உள்ளாட்சி தேர்தலில் காங்., ஜெயிக்க முடியாது. இதுவே ஒட்டுமொத்த காங்., தொண்டர்களின் கருத்து. ஏனெனில், தி.மு.க., செல்வாக்கற்ற கட்சியாக, செல்லாக்காசாக போய்விட்டது. தமிழக காங்., தலைவரை விரைவில் மேலிடம் நியமிக்கும். யார் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவர் தமிழகத்தில் காங்.,கை ஆட்சியில் அமர்த்துவதற்கும், கட்சியை வளர்ப்பதற்கும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தருவர். ஆனால், அவர் தி.மு.க., உள்ளிட்ட திராவிட கட்சிகளுக்கு "ஜால்ரா' போடுபவராக இருக்கக்கூடாது. தமிழகத்தில் அ.தி.மு.க., அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. தற்போது போலீஸ் ஸ்டேஷன்களில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதில்லை. அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்டு உரியவர்களிடம் தருவதற்காக போலீசில் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது, என்றார்.
மீண்டும் துவக்கம்: சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் காங்., கூட்டணி தொடரக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்திய இளங்கோவன், தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்தார். பின்னர், அக்கட்சியுடன்தான் கூட்டணி தொடருமென மேலிடம் அறிவித்ததால் அமைதியானார். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதையொட்டி, மீண்டும் அவர் தி.மு.க.,வை விமர்சிக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Dol Tappi Maa - NRI,இந்தியா
இந்த கொசு தொல்லை தாங்க முடியல்லப்பா !!
ஈயத்தைப் பார்த்து பித்தளை இழித்ததாக ஒரு பழமொழியுண்டு. காங்கிரசை, திமுகவைத்தவிர யாரும் கூட்டணிக்கு அழிக்கப்போவதில்லை. நிலைமை அப்படியிருக்க இவர் திமுகவை செல்லாக்காசு என்று சொல்கிறார்
 
Nava Mayam - newdelhi,இந்தியா
திராவிட கட்சிக்கு ஜால்ரா போடக்கூடாது என்கிறார் அடுத்த வரியிலேயே அதிமுக விற்கு ஜால்ரா அல்ல தண்டையே அடிக்கிறார் ! அதிமுக ஆரியர் கட்சியாகிவிட்டது என்று முடிவுசெய்துவிட்டாரா !
KULOTHUNGARAJA.VIJAY - CHENNAI,இந்தியா
2011-07-16 01:02:01 IST Report Abuse
திமுக்கவிற்கு வடிவேல் எப்படியோ, காங்கிரசுக்கு நம்ம இளங்கோவன்.. இந்த கொசு தொல்லை தங்க முடியலப்பா.. ஈரோட்ட்லயே நிக்க வச்சு (தோர்க்க) அடிச்சாலும், இன்னும் பினாதிட்டே இருக்குதுப்பா.. எனகென்னமோ இளங்கோவன் அதிமுகாவில் கொள்கைபரப்பு செயலாளர் பதவி வாங்கிட்டார் போல தெரியுது.. ரொம்ப கழுவுறாரே.. அப்புறம் காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தல்ல தனிச்சு நின்னு ஜெயிக்குமாம்.. இந்த பெரியார் பேரன், கலைஞர் காலில் விழுந்த போது "செல்லாக்காசு "னு தெரியல.. பப்பூ..பூ.. கீ... சிரிப்பு வருதுப்பா நினச்சாலே.. வீரப்பபம்பாளையம் சடையப்பன் 33ஏக்கர் நிலத்த பத்தி ஒன்னும் தெரியாது எங்களுக்கு.. ஜெயலலிதா காதில் விழுந்தா என்ன நடக்கும்..
 

கருத்துகள் இல்லை: