சனி, 16 ஜூலை, 2011

பதில் சொல்ல முடியாமல் திணறினார் நித்யானந்தா

நித்யானந்தா தியான பீடத்தில் குரு பவுர்ணமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி, காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
விழாவை ஒட்டி, ஆசிரமத்தின் பிரதான வாயிலில் இருந்து, ஆனந்தேஸ்வரா கோவில் வரையிலும் நித்யானந்தா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இந்த  குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அவர் நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்தார் பிறகு நித்யானந்தா அவருக்கு ஆசிர்வாதம்  வழங்கினார். சிறிது நேரம் ஆசி வழங்கிய நித்தியானந்தா பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக  பக்தர்களை தன்னால் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும் என்று சவால் விட்டார். குண்டலினியை எழுப்பி, மந்திரங்களை ஓதி அவர் சைகை செய்ய  உட்கார்ந்தபடி குதித்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவின் கட்டளையை ஏற்று  அந்தரத்தில் மிதக்க முயற்சித்தார். ஆனால் தடுமாறி கீழே விழுந்த அவர் அப்படியே சிரித்தப்படி உட்கார்ந்துவிட்டார். இதனையடுத்து நித்யானந்தாவிடம் ஒருவர்  சவால் விட்டார். தன்னை இச்சோதனைக்கு உட்படுத்திக்கொண்ட அவருக்கு எந்த மாற்றமும் ஏற்படாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தில்  ஈடுபட்டவருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் நித்யானந்தா

கருத்துகள் இல்லை: