சனி, 6 ஜனவரி, 2018

திருமாவளவன் : கலைஞர் என்னைப் பெயர் சொல்லி அழைத்தார்!

tamilthehindu :கருணாநிதி தன்னை அடையாளங்கண்டு, பெயர் சொல்லி அழைத்ததாக திருமாவளவன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியை இன்று (05-01-2018) கோபாலபுரம் இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்து அவரது உடல்நலன் குறித்து விசாரித்தார். அப்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார்.
பின்னர் வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் நலமுடன் இருக்கிறார். எங்களை நன்றாக அடையாளம் கண்டார், என் பெயரை உச்சரித்தார். அந்த அளவுக்கு உடல் நலம் தேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கருணாநிதி தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலம் மைய நோக்கு விசையாக விளங்கியவர். அவரை சுற்றியே தமிழக அரசியல் 1969 லிருந்து இயங்கி வந்தது. இன்று முதுமை காரணமாக உடல் நலிவுற்ற நிலையிலும் அவர் அரசியலை உற்று கவனிக்கிறார், அரசியல் தலைவர்களை அடையாளம் காண்கிறார், வாழ்த்து தெரிவிக்கிறார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர் இன்னும் நலமோடு நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். அவருத்து தமிழர் திருநாள் வாழ்த்துக்களாக அதை தெரிவித்துக்கொள்கிறோம்.''
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: