ஞாயிறு, 31 டிசம்பர், 2017

ரஜினி காந்த் : 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் .. தனிகட்சி ஆரம்பிப்பித்து .. ஆன்மீக அரசியல் ... ஜெ ஹிந்த்!

நக்கீரன் :; நான் அரசியலுக்கு வருவது உறுதி - ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனி கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நான் நிற்பேன்.
அரசியலுக்கு பணத்திற்கோ, பெயருக்கோ வரவில்லை. பதவிக்கு ஆசை இருந்தால் 1996 ல் அது தேடி வந்திருக்கும். 68 வயதில் பதவி ஆசை வருமா? அப்படி வந்தா நான் பைத்தியக்காரன் இல்லையா? பதவிக்காக இல்லை. அப்ப வேறு எதற்காக? அரசியல் ரொம்ப கொட்டுபோய்விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டு போய்விட்டது.
கடந்த ஒரு ஆண்டில், தமிழ்நாட்டில் நடந்த சில சம்பவங்கள் எல்லா மக்களையும் தலைகுணிய வைத்துள்ளது. இந்த நேரத்தில் நான் இந்த முடிவு எடுக்கவில்லை என்றால், என்னை வாழ வைத்த மக்களுக்கு நான் எதுவும் செய்யவில்லை என்ற குற்ற உணர்வு என்னை உறுத்தும். சிஸ்டமை மாற்ற வேண்டும். ஒரு ஆன்மீக அரசியலை உருவாக்க வேண்டும். இது சாதாரண விஷயம் இல்லை. நடுகடலில் மூழ்கி முத்து எடுப்பது மாதிரி.. ஆண்டவனின் அருள்.. மக்களின் ஆதரவு.. இரண்டும் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை: