சனி, 6 ஜனவரி, 2018

நீதிபதிகளுக்கு 200 % சம்பள உயர்வு.. MLAக்களுக்கு 100% சம்பள உயர்வும்.. பகல் கொள்ளை !

Shahul Hameed : MLAக்களுக்கு 100% சம்பள உயர்வும், நீதிபதிகளுக்கு 200 % சம்பள உயர்வும் கொடுத்த போது, யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை; போக்குவரத்து ஊழியர்களுக்கு சேரவேண்டிய 7000 கோடி ரூபாயை அரசு, ஏப்பம் விட்டதற்கும் யாரும் கவலைப்படவில்லை; ஒரு போக்குவரத்து தொழிலாளி ஓய்வு பெறும்போது சட்டப்படி கிடைக்க வேண்டிய பென்ஷன் கிடைக்கவில்லை என்றால், அதற்கும் யாரும் கவலைப்படுவதில்லை.
சட்டப்படி 15நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுத்த பின்னர்தான், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
தங்கள் சம்பளத்தை இழந்து, அரசு அறிவித்துள்ள, குறைந்த பட்ச ஊதியமான 18000 ரூபாய்க்கும் குறைவான ஊதியம் கேட்கும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், நியாயமான போராட்டம்! போக்குவரத்து ஊழியர்கள் ஒன்றும், செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல! நமது வீடுகளிலிருந்து வருபவர்கள்தான்!

வேலைநிறுத்தம் வேண்டாம் என்று சொல்பவர்கள், ஊழியர்களின் 7000 கோடி ரூபாய் பணத்தை ஏப்பமிட்ட அரசைக் கண்டித்து களத்தில் இறங்குங்கள்!
தயவுசெய்து, எதற்காக போக்குவரத்து ஊழியர்கள் போராடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, கொந்தளித்தால் போதுமே!
By Shahul Hameed

கருத்துகள் இல்லை: