அந்த பேட்டியில் சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் குறித்து துரைமுருகன் வெளுத்து வாங்கினார். இந்த பேட்டியை பார்த்த தினகரன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம்.">உடனடியாக விவேக்கை தொலைப்பேசியில் அழைத்த தினகரன், நமக்கும் எடப்பாடிக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம். அது வேறு. ஆனால், துரைமுருகனை ஏன் பேட்டி எடுத்தாய் எனக் கேட்க, ‘அவரு நமக்கு ஆதரவாகத்தான் பேசினார்’ என விவேக் கூற, நாம எல்லோரும் அடிச்சுக்கறது அவங்களுக்கு கொண்டாட்டமாத்தான் இருக்கும்.
அதை நீ வேற பேட்டி எடுத்து போடுவியா? இது சின்னம்மாவிற்கு தெரிந்தால் என்னவாகும் தெரியுமா? என ஒரு பிடி பிடித்தாராம்.<>ஜெயா தொலைக்காட்சியை தற்போது விவேக்தான் நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக