வியாழன், 23 நவம்பர், 2017

பாஜக வழக்கறிஞர் பாலாஜி மர்ம மரணம் ... வானதி சீனிவாசன் மகிழ்ச்சி...


ஓரே ஒரு உத்தமி...வானதி சீனிவாசனின் மர்ம உலகம்.
பாஜக வழக்கறிஞர் பிரிவில் உள்ளவர் பாலாஜி. அவர் இரு மாதங்களுக்கு முன், திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்து சிகிச்சை பலனின்றி கடந்த 15 நாட்களுக்கு முன் இறந்து போனார். அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரிடம் 3 கோடி ரூபாய் பணம் இருந்தது. அந்த பணம் அப்படியே இருந்தது காணாமல் போகவில்லை. < இந்த பாலாஜி, பிஜேபியை சேர்ந்த கிருத்திகா என்ற பெண்ணிடம் இருந்து, திருவான்மியூரில் ஒரு நிலத்தை வாங்குகிறார். இந்த கிருத்திகா தற்போது மதுரையில் வசித்து வருகிறார். கிருத்திகாவும், வானதியும் நெருங்கிய நண்பர்கள். திருவான்மியூரில் வாங்கப்பட்ட நிலத்தை, கிருத்திகா குறைந்த விலைக்கு விற்றுவிட்டதாக வானதி கூறி, அதில் தகராறு செய்யச் சொல்கிறார். அதன்படி கிருத்திகாவும் பாலாஜியிடம் தகராறு செய்கிறார். தகராறு முற்றவே இறுதியாக, பாஜகவின் அமைப்புச் செயலாளர் மோகன்ராஜுலு தலையிட்டு சமரசம் செய்துள்ளார்.

இதையடுத்து, கடுப்பான பாலாஜி, வானதியின் ஸைலாக் ஊழல்கள் குறித்து முழுமையான தகவல்களை எடுத்துக் கொண்டு டெல்லி சென்று, அமித் ஷாவை சந்தித்து அத்தனை ஆதாரங்களையும் அவரிடம் அளித்தள்ளார். விபத்து நடந்தபோது பாலாஜியோடு காரில் சென்ற நண்பருக்கு எந்த காயமும் இல்லாமல் தப்பித்துள்ளார். பிஜேபியில் உள்ள பாலாஜி நண்பர்கள், பாலாஜியின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று சந்தேகிக்கின்றனர். திருவான்மியூரில் பாலாஜி வாங்கிய நிலத்தில், வானதிக்கு என்ன ஆர்வம் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

கருத்துகள் இல்லை: