”இன்றைய நாளிதழ்கள், தொலைக்காட்சி செய்திகளில் அசோக்குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டு, அவர் ஒரு கடிதம் வைத்தாகவும், அதில் சில வார்த்தைகள் எழுதி வைத்துள்ளதாகவும் செய்திகளில் வந்துள்ளது. அசோக்குமார் என்பவர் எழுதி வைத்தாக சொல்லப்படும் கடிதம் அவர் எழுதி வைத்ததுதானா?.
அசோக்குமார் என்பவர் சசிகுமாரின் உதவியாளர். நாங்கள் அசோக்குமார் என்பவருக்கு எந்த பண வரவு செலவும் செய்யவில்லை. படம் தயாரிப்பதற்கு சசிகுமார்தான் எங்களிடம் பணம் பெற்றுள்ளார். எங்களிடம் எந்தவித வியாபார தொடர்பும் இல்லாத அசோக்குமார் எங்களை கடிதத்தில் எழுதி வைத்துள்ளார் என்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது.
எங்களிடம் பண உதவி பெற்று படம் தயாரிக்கிறார்கள். அதை படம் ரிலீஸ் செய்யும் போது செட்டில் செய்வார்கள். இதுதான் சினிமா நடைமுறை. எந்த முதலீடும் இல்லாமல் சிலர் படம் தயாரிப்பதாக வருகிறார்கள். எந்தவித செக்யூரிட்டியும் இல்லாமல் இவர்களை நம்பிப் பணம் தருகிறோம். இவர்கள் ஒரு படத்திற்குப் பலரிடம் பணம் வாங்குகிறார்கள்.
ஆனால், இவர்கள் படம் தயாரிக்காமல் வீடு, கார் என்று வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து பின்னர் பண உதவி செய்த எங்களையும் சிரமப்படுத்துகிறார்கள். இப்படி சந்தர்ப்பங்களை பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடி பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் அலைவதாகத் தெரிகிறது. நாங்கள் கடந்த இருபது ஆண்டுகளாக சினிமா தொழில் செய்கிறோம். எங்கும் எங்கள் மேல் எந்தப் புகாரும் கிடையாது.
அசோக்குமார் என்பவர் எழுதியதாக சொல்லப்படுவதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்”
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக