வியாழன், 23 நவம்பர், 2017

ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ்-ஒபிஎஸ் மலர்தூவி மரியாதை

தினத்தந்தி : சென்னை, அ.தி.மு.க பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது? என்பது தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடந்தது. விசாரணையின் முடிவை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.  கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு ஒதுக்கியது. இதனால், அவர்கள் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் முதல் அமைச்சர் அணியினர்  உற்சாகம் அடைந்துள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சின்னம் மீண்டும் கிடைத்துள்ள நிலையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முதல்வர், துணை முதல் அமைச்சர் வருகை தந்தனர்.அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். 


இதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். முன்னதாக ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஜெயலலிதா நினைவிடம் வந்த முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர்களும் கட்சி  மரியாதை செலுத்தினர். இதையடுத்து, எம்.ஜி.ஆர், அண்ணா நினைவிடங்களிலும் மரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை: