வியாழன், 23 நவம்பர், 2017

நடிகர் பார்த்திபன் : 20 லட்சம் கடனுக்காக 7 கோடி ரூபாய் வீட்டை விற்றேன்

கந்துவட்டிக் கொடுமை காரணமாகத் தயாரிப்பாளர் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.< அவரின் தற்கொலைக்குக் காரணமான சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.< சசிகுமாரின் அத்தை மகனான அசோக்குமாரின் இந்தத் தற்கொலை சினிமா பிரபலங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நடிகர் பார்த்திபன், அசோக்குமார் இறப்பு சம்பந்தமாக ஒரு வாய்ஸ் மெஜேஸ் அனுப்பியிருக்கிறார். ‘அன்பு நிறைந்த தயாரிப்பாளர்களுக்கு வணக்கம். அன்பு மட்டுமே நம்மை இணைக்கும் சக்தியாக இருக்கும். அசோக்குமாரின் மரணம் நம்ம சினிமா கனவுக்குள்ளே பெரிய கல்லை இறக்கி வைத்துவிட்டு போயிருக்கிறது. மனம் பிணமாய் கணக்கிறது. அசோக்குமார் போன்ற எமோஷனலாய், சென்ஸிடிவாக முடிவு எடுக்கக்கூடிய மென்மையான மனிதர்கள் இனி இங்கே ஜீவிக்கவே முடியாது என்பதற்கு இந்தக் கொலை ஒரு எடுத்துக்காட்டு. இந்த நிலை தொடர்ந்தால் கந்துவட்டி மட்டுமே இங்கு ஜீவிக்கும். வெறும் கெட்டவர்கள் மட்டுமே இங்கே ஜீவிப்பார்கள்.
இவர்கள் வட்டி வசூலிக்கும் முறை ரொம்பக் கொடுமையானது தண்டனைக்குரியது. அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தப் பிரச்னையிலிருந்து நாம் எப்படி வெளியே வர வேண்டும் என்பதைத்தான் இப்போது முதலில் யோசிக்க வேண்டும்.
இதில் இன்னொரு விஷயம் இருக்கு. நண்பர்கள்கூட கஷ்டப்படும் வேளையில் நமக்கு உதவி செய்வதில்லை.
இந்த வட்டிக்கு விடுபவர்கள்தான் உதவுவார்கள். எங்க அம்மாவின் தாலியை அடகு வைக்கவில்லை என்றால் நான் படித்து இருக்க முடியாது.
என்னை மாதிரி நிறைய பேரும் இந்த அடகு கடைகள், வட்டிக்காரர்களிடம் அவசரத்துக்குப் பணம் கேட்டு வாங்கி நிறைய நேரங்களில் அவர்களின் வாழ்க்கையை ஓட்டி இருக்கிறார்கள்.
ஆனால், இப்படித் தப்பான, கொடியவர்களிடம்தான் பணம் வாங்குறோம் என்ற நிலையைப் புரிந்து கொண்டு அதை வாங்காமல் இருக்க என்ன பண்ணுவது. ஒரு வேளை வாங்கிவிட்டால் என்ன பண்ணுவது என்று யோசிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, வெறும் 20 லட்ச ரூபாய் கடனுக்காக வளரசவாக்கத்தில் இருந்த 75 லட்சம் மதிப்புள்ள என் பங்களாவை விற்றேன்.
இன்று அதன் மதிப்பு ஏழு கோடி ரூபாய். வாங்கிவிடலாம், இன்னும் சரியான படம் பண்ணுனா நாளைக்கே வாங்கிவிடலாம் என்று நினைத்து இன்றுடன் 13 வருஷம் ஆகிவிட்டது.
இப்பவும் என் வாழ்க்கையில் பெரிய தவறாக நினைப்பது அதைத்தான். ஆனால், மனசில் என்ன சந்தோஷம் என்றால், ‘யாருக்கும் நம்ம 10 பைசாகூட பேலன்ஸ் வைக்கவில்லை” என்பதுதான்.
சமீபத்தில் சேரன், ”ஆபீஸைக் காலிபண்ண வேண்டிய சூழ்நிலை” என்றார். நான் உடனே ராத்திரி அவருக்கு போன் பண்ணிச் சொன்னேன்.
என் அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்னு. இதைத் தற்பெருமைக்காகச் சொல்லவில்லை.
நான் இருப்பதே திருவான்மியூரில் வாடகைக்குத்தான். இதுவும் நண்பருக்கு நண்பர் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான். நாம் இன்று சொல்கிறோம்.
”எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சங்கத்துக்கு வாங்க தீர்த்து வைக்கிறோம்’னு. ஒரு மனிதன் பிரச்னையில் இருக்கும்போது தீர்த்து வைக்க முடிகிறதா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அந்த நேரத்தில் யார் உதவி செய்ய முன் வருகிறார் என்பது தெரியாமல்தான் இருக்கிறது.
ரொம்ப வருடங்களுக்கு முன்பு மதுரையில் அதிக கந்துவட்டி பெரிய பிரச்னையாக இருக்கும்போது, ஒரு கிராமத்தில் சின்னப்பிள்ளைனு ஓர் அம்மா இந்தக் கந்துவட்டிப் பிரச்னையிலிருந்து அந்தக் கிராமத்தைக் காப்பாற்றுவதற்காகச் சிறுகச் சிறுகப் பணத்தை 10 பேரிடம் குறைந்த வட்டிக்கு வாங்கி அதிகமான பணத்தை வாங்கிய கந்துவட்டிக்காரர்களிடம் கொடுத்துவிட்டு, தான் உழைத்து உழைத்து அவங்க வாங்கிய வட்டிக் கடனை ஈடு செய்துகொண்டிருந்தார்கள்.
இதற்காக அப்போது இருந்த பாரதப் பிரதமர் அந்தச் சின்னப்பிள்ளை காலைத் தொட்டு வணங்கினார்.
அப்போதுதான் உலக அழகினு ஐஸ்வர்யாவைத் தேர்ந்தெடுத்த காலம். அந்தச் சின்னப்பிள்ளை அம்மாவை நான் சென்னைக்கு வரவழைத்து இவங்கதான்
உலக அழகினு சின்னப்பிள்ளை அம்மாவுக்கு கிரீடம் எல்லாம் சூட்டினேன். அவ்வளவு பெரிய விஷயத்தை சாதித்து இருக்காங்க இந்தப் பெண்மணி.
இவ்வளவு பெரிய சங்கங்கள், வசதிகள் உள்ளவங்க நினைத்தால் இதைச் செய்ய முடியாதா… நிச்சயமாகச் செய்ய முடியும்.
அது அப்படித்தான், ஒப்பாரி வைப்பதற்காக வேண்டும்னா நம்ம கூட்டமாகக் கூட முடியும்.
இப்போது நான்கூட ஒரு சிரமத்தில் இருக்கிறேன் என்றால் அந்தச் சிரமத்தைப் போய் சினிமா சம்பந்தப்பட்டவர்களிடம் போய் பேசுவதற்கு இன்னும் சிரமாக இருக்கிறது.
யாரும் உதவி செய்வதற்கு முன் வரமாட்டார்கள். ஒரு பக்கம் இந்த மாதிரி. வட்டிக்குப் பணம் வாங்கி நம்ம கொடுக்க முடியாமல் நம்மளை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி அந்த அவமானத்தில் தற்கொலை பண்ணிக்கொள்கிற நிலைமை.
என்னுடைய படத்தை வெளியிட்ட வகையில் திருச்சியிலிருந்து 4.5 லட்சம் ரூபாய் வரணும். 10 மாதமாகப் போராடி ஒரு லட்சம் ரூபாய் வந்திருக்கு.
இன்னும் மூன்று லட்சம் ரூபாய் வருமா என்பது தெரியவில்லை. இதற்காக நான் வட்டி கட்டிக்கொண்டிருக்கிறேன்.
ஆனால், என் பணத்தை வாங்கிவிட்டு கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலை அவங்க அதை இழுத்தடித்துக்கொண்டே இருக்குறாங்க.
இதைச் சங்கத்தாலும் தீர்க்க முடியவில்லை. ஒருத்தன் பணத்தைக் கொடுத்துவிட்டு நம்மள டார்ச்சர் பண்ணுறான் இன்னொருத்தன் நம்மிடம் பணம் வாங்கிக்கொண்டு நம்ம பணத்தைத் தரமால் இழுத்தடிக்கிறான்.
பிரச்னைகள் நெருக்கடி கொடுக்கும்போது ஒரு மனிதனால் மீளவே முடியவில்லை. நமக்கு ஒரு தைரியம் நம்ம நேற்று ஒன்றும் கொண்டு வரவில்லை. நாளைக்கு நம்ம எடுத்துப் போகப்போறதும் இல்லை என்று.
இன்னைக்கு இரவு 2 மணிக்கு எழுந்து யோசித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் கந்துவட்டி பிரச்னையிலிருந்து நம்ம தப்பிக்க ஒரே வழி நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்கிற கூட்டுறவு அமைப்பு.
அந்த அமைப்பிலிருந்து ஒருவருடைய சிரமத்துக்கு இன்னொருவர் எப்படி உதவலாம் என்று யோசிக்க வேண்டும். ஒருத்தன் நல்லா இருந்தால் மட்டுமே அந்தக் கடனை திருப்பிக் கொடுக்க முடியும்.
இல்லையென்றால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாது. அதனால் இந்தக் கந்துவட்டி கொடுமையிலிருந்து நம்ம வெளியே வர நம்ம எல்லோரும் சேர்ந்து பேசி ஏதாவது ஒரு முடிவுக்கு வரணும். இனியாவது இந்த மாதிரி ஒரு பலி ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.
258047c5-af9f-429e-9166-f91ce19e6898_13375 ’20 லட்சம் கடனுக்காக 7 கோடி ரூபாய் வீட்டை விற்றேன்..!’’ – பார்த்திபனின் கந்துவட்டி அனுபவம் ’20 லட்சம் கடனுக்காக 7 கோடி ரூபாய் வீட்டை விற்றேன்..!’’ – பார்த்திபனின் கந்துவட்டி அனுபவம் 258047c5 af9f 429e 9166 f91ce19e6898 13375
இவரைத் தொடர்ந்து நடிகர் மற்றும் எம்.எல்.ஏ கருணாஸும் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘கந்துவட்டிக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார். மேலும், ஃபைனான்ஸியர் அன்புச்செழியனை உடனே கைது செய்ய வேண்டும். அரசும் கந்து வட்டியின் வாயிலாகத் தொடர்ந்து நடந்து வரும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கேட்டுள்ளார்.
bcc98a04-67cc-4956-9ef2-daf96a46055c_13186 ’20 லட்சம் கடனுக்காக 7 கோடி ரூபாய் வீட்டை விற்றேன்..!’’ – பார்த்திபனின் கந்துவட்டி அனுபவம் ’20 லட்சம் கடனுக்காக 7 கோடி ரூபாய் வீட்டை விற்றேன்..!’’ – பார்த்திபனின் கந்துவட்டி அனுபவம் bcc98a04 67cc 4956 9ef2 daf96a46055c 13186

கருத்துகள் இல்லை: