வெள்ளி, 24 நவம்பர், 2017

இரட்டை இலையும் அது கடந்து வந்த பாதையும் ...

Sowmian Vaidyanathan : இரட்டையிலையில் யார் போட்டியிட்டாலும் வெற்றிபெறுவார்கள் - மதுசூதனன்..!
1980 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி...
1986 உள்ளாட்சி தேர்தலில் படு தோல்வி... 1996 சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத தோல்வி.. 1997 உள்ளாட்சி தேர்தலில் தோல்வி...
1999 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி...
2004 பாராளுமன்ற தேர்தலில் அடியோடு தோல்வி...
2006 சட்டமன்ற தேர்தலில் படு தோல்வி...
2007 உள்ளாட்சி தேர்தலில் தோல்வி...
2009 பாராளுமன்ற தேர்தலில் தோல்வி...
இரட்டையிலை சின்னம் தேர்தலுக்கு அறிமுகமாகி 40 ஆண்டுகளில் ஒன்பது பொதுத்தேர்தல்களில் படுதோல்வி அடைந்து மண்ணைக் கவ்வியிருக்கின்றது..!
இந்த தோல்விகள் அனைத்துமே எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா என்ற சினிமா புகழ் நட்சத்திரங்கள் தலைமையில் நடைபெற்ற தேர்தல்களியே சாத்தியப்படுத்தப்பட்டிருக்கின்றன..!
இந்த நிலையில் பல தோல்விகளைச் சந்த்திருக்கும் இரட்டையிலை... சினிமா கவர்ச்சித் தலைமையும் இல்லாமல்... இனிமேலும் வெற்றி பெறும் என்று பேசுவது எல்லாம்... ஆகச் சிறந்த நகைமுரண்..!
சரி... இந்த இரட்டையிலை எப்பொழுதெல்லாம் எப்படி வென்றிருக்கின்றது என்று பார்ப்போமா..?!
1977இல் கலைஞர் மீது 35க்கும் அதிகமான பொய் வழக்குகளைப் போட்டு... அதற்காக சர்காரியா தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து... அதை ஊழல் ஊழல் என்று மக்களிடம் பரப்புரை செய்து... ஊழலுக்கு எதிரானவர் என்று எம் ஜி ஆரை முன்னிறுத்தி வாங்கப்பட்ட வெற்றி...!

1980இல்... ஆட்சி கலைக்கப்பட்ட பச்சாதாபம் மற்றும் திமுக காங்கிரஸ் கூட்டணி சரிபாதி தொகுதிகளைப் பிரித்துக்கொண்டு நின்றதால், திமுக ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழ்நிலையால் வாங்கப்பட்ட நூலிழை வெற்றி..!
1984இல்... இந்திராகாந்தி கொல்லப்பட்ட பச்சாதாபமும், எம் ஜி ஆர் உடல் நலமில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெறும் படங்களை காட்டி பெற்றப்பட்ட அனுதாபமும் அந்த கூட்டணி வெற்றி பெற்றது...!
1991இல்... இராஜீவ் காந்தியை திமுக தான் கொன்றது என்ற பழியை அப்பட்டமாக சுமத்தி மக்களை நம்பவைத்து அதிமுக - காங்கிரஸ் கூட்டணி வாங்கிய வெற்றி அது...!
2001இல்... மூப்பனார், வைக்கோ, ராமதாஸ் போன்றோர் திமுகவுக்கு செய்த துரோகத்தால் வாங்கப்பட்ட வெற்றி...!
2011இல்... சர்க்காரியா மாதிரி 2ஜியை விளம்பரப்படுத்தி, விஜயகாந்த் தயவால் பெறப்பட்ட வெற்றி...!
2016இல்... பெற்ற வெற்றி இரட்டையிலைக்கா, 200 ஓவாவுக்கா என்பதை வாக்காளர்கள் மனநிலைக்கே தெரியும்..!
ஸோ.... ஆல் மங்கீஸ்... இந்த இரட்டையிலையை கொண்டுட்டு வந்து எல்லாம் இங்கே பூச்சாண்டி காட்ட வேண்டாம்...!!
நாங்க ரெடி.... வர்லாம்... வர்லாம்... வாஆஆஆ...!

கருத்துகள் இல்லை: