வியாழன், 12 மே, 2016

உடுமலை கௌசல்யா தற்கொலை முயற்சி... மருத்துவமனையில்

நக்கீரன்:கவுசல்யா தற்கொலை முயற்சி : உடுமலையில் பரபரப்பு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வெட்டிக்கொல்லப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பழனியைசேர்ந்த வேறு சாதிப்பெண் கவுசல்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட சங்கர், கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி கவுசல்யாவின் பெற்றோர் அனுப்பிய கூலிப்படையினரால் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார். இதையடுத்து போலீசில் சரணடைந்த கவுசல்யாவின் பெற்றோருக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சங்கரின் பெற்றோருடன் வசித்து வந்த கவுசல்யா இன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் உடுமலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது



உடுமலையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள மடத்துக்குளத்தைச்  சேர்ந்த கல்லூரி மாணவர் சங்கர், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச்  சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து கௌசல்யாவின் பெற்றோர்,  காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் அவர்களைப் பிரிக்கவும் முயற்சி செய்தனர். அது தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 13 ம் தேதி உடுமலையில், சங்கரும் அவரின் மனைவி கௌசல்யாவும் சிலரால் வெட்டப்பட்டனர். அதில், பலத்த காயம் அடைந்த அவர்களை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால்  அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக பலியானார்.

அதனைத் தொடர்ந்து நடந்த போலீசாரின் விசாரணையில், சங்கரை கௌசல்யாவின்  பெற்றோர் மற்றும் சிலர் சேர்ந்து கௌரவக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்கள் நடத்தின. தனது காதல் கணவர் சங்கரை,  பெற்றோர் ஆள் வைத்துக் கொலை செய்தது பற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த கௌசல்யா,  அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் பலத்த காயத்தோடு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்ற கௌசல்யா,  தனது கணவர் சங்கரின் வீட்டிற்கு சென்றார். அங்கு சங்கரின் பெற்றோருடன் வசித்து வந்த கௌசல்யா நேற்று (புதன் கிழமை) இரவு 8 மணியளவில் திடீரென விஷம் குடித்து மயங்கினார். இதையடுத்து அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கௌசல்யா ஏன் விஷம் குடித்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.விகடன்.கம

கருத்துகள் இல்லை: