திங்கள், 9 மே, 2016

நடிகர் கலாபவன் மணியின் மரணம் கொலைதான் ...சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி!

கலாபவன் மணியின் மரணம் இயற்கையானதல்ல என்று மருத்துவ பரிசோதனை சந்தேகத்திற்கிடமின்றி உறுதி செய்துள்ளது.ஆனால், மணியின் மரணத்துக்கு யார் காரணம் என்ற கேள்வி இன்னும் பதிலளிக்கப்படாமலேஉள்ளது. இந்நிலையில், மணியின் நெருக்கமான சினிமா நண்பர்கள் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன்.கலாபவன் மணி தனது சினிமா நண்பர்கள் பலருக்கு கடன் தந்து உதவியிருக்கிறார். சொத்து ஒன்றை வாங்கவேண்டி வந்தபோது, அந்த கடன்களை கலாபவன் மணி திருப்பி கேட்டுள்ளார்.
கலாபவன் மணி கடனை திருப்பி கேட்க மாட்டார் என்று நினைத்திருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்துள்ளது.அவர்கள்தான் மணி இனி நடிக்க மாட்டார் என வதந்தி கிளப்பியதாகவும், அவர்களே மணியின் மரணத்துக்கும் காரணம் எனவும் ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.ஆனால், போலீஸ் இன்னும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: