

இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர், டெல்லி பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திரமோடி இளங்கலை பயின்றதற்காக பெற்ற சான்றிதழையும், குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்ததற்காக பெற்ற சான்றிதழையும் காண்பித்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஜெட்லி "நாட்டில் பொது விவாதங்கள் மிகவும் தரம் தாழ்ந்து வருகின்றன. அதற்கு எடுத்துக்காட்டுதான் பிரதமர் மோடி மீது ஆம் ஆத்மி கட்சியினர் முன்வைத்த அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. பிரதமரின் கல்வித் தகுதியை விளக்குவதற்காக ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதற்கு வெட்கப்படுகிறேன். தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் போலிச் சான்றிதழ் வழக்கில் சிக்கியுள்ளதை மறந்துவிட்டு பிரதமர் மோடி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்" என்றார்.
ஆனால் அமித்ஷா வெளியிட்ட இந்த கல்வி சான்றிதழ் போலியானது என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. "பிரதமர் மோடியின் பெயர் பி.ஏ. சான்றிதழில் 'நரேந்திரகுமார் தாமோதரதாஸ் மோடி' என்று உள்ளது. அதே சமயம் அவரது எம்.ஏ. சான்றிதழில் 'நரேந்திர தாமோதரதாஸ் மோடி' என்று உள்ளது. மோடி தனது பெயரை மாற்றியதற்கான அபிடவிட்டை வைத்துள்ளாரா? அப்படி இருக்கிறதென்றால், அந்த அபிடவிட் எங்கே?
பிரதமரின் பி.ஏ. மார்க்ஷீட்டில் 1977 என்று உள்ளது. ஆனால் அவரது பி.ஏ. சான்றிதழில் 1978 என காணப்படுகிறது. எனவே அமித்ஷாவும் ஜெட்லியும் வெளியிட்ட பிரதமரின் கல்வி சான்றிதழ் போலியானது" என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான அஷுடோஸ் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக