ஞாயிறு, 8 மே, 2016

சமசீர் கல்வியை ஒழிப்பது சமுக நீதியாம்.. சொல்வது கம்யுனிஸ்டுகள் ....ஒரு பிளாஷ் பேக்


சமச்சீர்க் கல்விக்குக் கொள்ளி வைத்து
போலிக் கம்யூனிஸ்டுகள் சட்ட மன்றத்தில்
பேசிய பேச்சு! ஆதாரம் பாரீர்! சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்த கலைஞர்
2011 தேர்தலில் பதவி இழக்கிறார். ஜெயா முதல்வர்
ஆகிறார்.
பார்ப்பன துக்ளக் சோவின் ஆலோசனைப்படி,
சமச்சீர் கல்வியை ஒழிக்க சட்டத் திருத்தம்
கொண்டு வருகிறார் ஜெயா. கொண்டு வந்த நாள்:
ஜூன் 7,2011.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி வீ சண்முகம்
சமச்சீர் ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வருகிறார்.
அதிமுக, தேமுதிக, CPI, CPM கட்சிகள் உள்ளிட்ட
பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் சமச்சீர் ஒழிப்பு
மசோதா சட்டமாக நிறைவேறுகிறது.

மு க ஸ்டாலின் தலைமையில் திமுகவினர்
மசோதாவை எதிர்த்து முழக்கமிட்டுக் கொண்டு
வெளிநடப்புச் செய்கின்றனர்.
மசோதா மீதான விவாதத்தின் போது, மார்க்சிஸ்ட் கட்சி
எம்.எல்.ஏ , திரு கே பாலகிருஷ்ணன் சமச்சீர் கல்வியைக்
கண்டித்து ஆவேசமாகப் பேசுகிறார்.

(ஆதாரம்: தினமணி, சென்னை, ஜூன் 8,2016, பக்கம்-9)
அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ திரு ஆறுமுகம்
சமச்சீருக்குக் கொள்ளி வைத்துப் பேசும்போது,
"இந்த சட்ட முன்வடிவு சமூகநீதிக்கான சட்ட முன்வடிவு"
என்று ஆவேசம் கொள்கிறார்.
(ஆதாரம்: தினமணி சென்னை ஜூன் 8, 2016: பக்கம்-9)
சமச்சீர் கல்வியை ஒழித்துக் கட்டுவதுதான்
சமூகநீதியாம். எப்பேர்ப்பட்ட துரோகிகள் இந்தப்
போலிக் கம்யூனிஸ்டுகள்!
இவர்கள் மீண்டும் தற்போதைய தேர்தலில் போட்டி
இடுகிறார்கள்; வாக்குக் கேட்டு வருவார்கள்.
ஓட ஓட விரட்டி அடியுங்கள், மக்களே.<
நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

கருத்துகள் இல்லை: