இன்னும்
சில நாட்களில் வாக்குப்பதிவு என்கிற நிலையில், அரசியல் கட்சிகள்
படுதீவிரமாக வாக்கு சேகரிக்கின்றன. கூட்டணி பலம், தலைவர்களின் பிரச்சாரம்
இவற்றைக் கடந்து ஒவ்வொரு பூத்வாரியான செயல்பாடுகள்தான் இறுதிக்கட்ட சூழலைத்
தீர்மானிக்கும். அந்த அடிப்படையில் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் எப்படி
செயல்படுகின்றன. மாற்று அணிகள் எந்த நிலையில் உள்ளன என்பதை அறிய
களமிறங்கினோம். அ.தி.மு.க.வின்
கூட்டணி பார்ட்னர்களாக தேர்தல் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகள்
செயல்படுவது தெரியவந்தது. தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்கப்
போராடுவதும் தெரிந்தது. மற்ற அணிகள் தத்தமது பலத்திற்கேற்ப
செயல்படுகின்றன.எடுத்துக்காட்டாக,
திருச்சி கிழக்குத் தொகுதி 25-வது வார்டின் நிலவரத்தை ஆராய்ந்தோம்.
துரைசாமிபுரம், கீழப்புதூர், காஜாப்பேட்டை என்று மூன்று மிக முக்கியமான
பகுதிகள் கொண்ட இந்த வார்டில் சுமார் 8500 வாக்காளர்கள் இருக்கி றார்கள்.
இவர்களில் கிறிஸ்தவ வெள்ளாளர், இந்து பிள்ளைமார், முஸ்லிம், கோனார்,
அருந்ததியர் தலித், முத்துராஜா, செட்டியார், என்று பல வகை சமூக மக்களும்
இணக்கமாக வாழ்கிறார்கள். மாநகராட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. என
மாறி மாறி வெற்றி பெற்று வந்த நிலையில், தற்போது அ.தி.மு.க. வசம் உள்ளது.
இங்கு அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் வட்டச்செய லாளர், அவைத்தலைவர், துணைச் செயலாளர் 2 பேர், பொரு ளாளர், துணைத்தலைவர், வட்ட பிரதிநிதி 2 பேர், 8 பேர் என கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள். இது இல்லாமல் இளைஞர் பாசறை 9 பேர், இளம் பெண்கள் பாசறை 9 பேர், அம்மா பேரவை 9 பேர், மகளிர் அணி 9 பேர் என்று 45 பேர் இருக்கிறார்கள். இது இல்லாமல் ஒரு வார்டுக்கு குறைந்தது 7 பூத் முதல் 12 பூத் கமிட்டி இருக்கும்... இதில் ஒவ்வொரு பூத்திற்கும் 20 பேர் வரை போட்டிருக்கிறார்கள். ஆக, ஒரு வார்டில் குறைந்தது 160 பேர் அ.தி.மு.க.வுக்காக வேலை செய்கிறார்கள். தி.மு.க.வைப் பொறுத்தவரை வட்டச் செயலாளர், அவைத்தலைவர், துணைச்செயலாளர் 3 பேர், பொருளா ளர், வட்ட பிரதிநிதி 5 பேர் என்று 11 பேர் கட்சி பொறுப்புகளில் இருக்கிறார்கள். இது இல்லாமல் இளைஞர் அணி 6 பேர், தொண்டர் அணி 2 பேர், மகளிர் தொண்டர் அணி 2 பேர், மாணவர் அணி, மகளிர் அணி, சிறுபான்மையினர் அணி, கலை இலக்கிய பேரவை என்று 45 பேர் இருக்கிறார்கள். அத்துடன் ஒரு பூத் கமிட்டிக்கு 10 பேர் வீதம் 8 பூத் கமிட்டி நியமித்திருக் கிறார்கள். எல்லாரையும் சேர்த்தால் 140 பேர் வேலை செய்கிறார்கள்.அ.தி.மு.க.வில் உள்ளதுபோல இளைஞர் -இளம்பெண் பாசறை என்ற அமைப்பு தி.மு.க.வில் இல்லாததால் கட்சி வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அ.தி.மு.க.வைவிட குறைவாக இருப்பதுடன், பெரும்பாலான வர்கள் நடுத்தர வயதினராக இருக்கிறார்கள். அதே நேரத் தில், இதனை ஈடுசெய்யும் வகையில் கூட்டணிக் கட்சி யினர் தி.மு.க. பக்கம் இருக் கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் வார்டு தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர் 2, பொரு ளாளர், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வார்டு தலைவர், துணைத்தலைவர் 2 பேர், செயலாளர், துணைச்செய லாளர் 2 பேர், பொருளாளர், என்று பொறுப்பாளர்கள் மட்டும் 24 பேர் இருக்கிறார் கள். ஒருசில வார்டுகளில் இந்தளவு ஆட்கள் இருப்ப தில்லை. எனினும், த.மு.மு.க. வினர், முஸ்லிம் லீக் பிரமுகர் கள் சில வார்டுகளில் இதனை ஈடு செய்கிறார்கள். இந்த பலத்துடன் அ.தி.மு.க.விடம் மல்லுக்கட்டுகிறது தி.மு.க.
மக்கள் நலக் கூட்டணி யைப் பொறுத்தவரை, தே.மு. தி.க. சார்பில் வட்டச் செயலா ளர், தலைவர், துணைச்செய லாளர் 3 பேர், பொருளாளர் வட்ட பிரதிநிதி 5 பேர் என்று 11 பேர் கட்சிப் பொறுப்பு களில் இருக்கிறார்கள். தொண்டர் அணி 3 பேர், இளைஞர் அணி 3 பேர், மாணவர் அணி 3 பேர், மகளிர் அணி 3 பேர், இது இல்லாமல் கிளைக் கழகம் என்று 6 பேர் இருக்கிறார்கள். ம.தி.மு.க. சார்பிலும் நிர்வாகிகள் இருக்கிறார்கள். சி.பி.எம். சார்பில் இந்த வார்டில் பகுதி பொறுப்பாளர் ஒருவர், கிளைச் செயலாளர் ஒருவர், இளைஞர் சங்கம் (டைஃபி) தலைவர், கிளைச் செயலாளர் என்று 4 பேர் இந்த வார்டில் இருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒரே ஒரு
-தாமோதரன் பிரகாஷ், ஜெ.டி.ஆர், எஸ்.பி.சேகர் nakkheeran,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக