
அதிமுக முன்னணி
நேற்று வெளியான 17 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பில் காஞ்சிபுரம்,
திருப்போரூர், கும்மிடிப்பூண்டி, மதுரவாயல், பொன்னேரி(தனி), திருவள்ளூர்,
திருவொற்றியூர், அம்பத்தூர் ஆகிய தொகுதிகளில் முன்னணியில் உள்ளதாக தந்தி
டிவி தெரிவித்துள்ளது.
திமுக முன்னணி
செங்கல்பட்டு, மதுராந்தகம் ( தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), மாதவரம்,
பூந்தமல்லி ( தனி), செய்யூர் ( தனி) ஆகிய 6 தொகுதிகளில் முன்னணியில்
உள்ளது. அதே நேரத்தில் ஆவடி, உத்திரமேரூர், திருத்தணி ஆகிய தொகுதிகளில்
இழுபறி நிலையே நீடிக்கிறது.
கடுமையான போட்டி
இதுவரை 206 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகளை தந்தி டிவி
வெளியிட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில்
சனிக்கிழமை வரை தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிடுகிறது. இதுவரை
வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி அதிமுக 96 தொகுதிகளிலும் திமுக 80
தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது மீதமுள்ள 30 தொகுதிகளிலும் கடுமையான
போட்டி நிலவுகிறது. வட மாவட்டங்களில் பல தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி
கடுமையான நெருக்கடியை கொடுக்கிறது என்பதால் வெற்றி வாய்ப்பில் இழுபறி
நிலையே நீடிக்கிறது
Read more at:://tamil.oneindia.com
Read more at:://tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக