
இலவச பொருட்களில் ஊழல்
அ.தி.மு.க. ஆட்சியில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தருகிறோம் என்று கூறி
ரூ.1,200 மதிப்புள்ள பொருட்களை இலவசமாக கொடுத்துவிட்டு அதன்மூலம் ரூ.8
ஆயிரம் கோடி லஞ்சம் பெற்றுள்ளனர். இதேபோல் ரூ.350 மதிப்புள்ள செல்போனை
இலவசமாக தருகிறோம் என்று கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள்.
பணத்தின் மீது பாசம்
ஜெயலலிதாவிற்கு மக்கள் மீது பாசம் இல்லை. பணத்தின் மீதுதான் பாசம் உள்ளது.
தேர்தலையொட்டி அ.தி.மு.க.வினரிடம் இருந்து ரூ.100 கோடி வரை பணம் பறிமுதல்
செய்யப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் ஊழல் பணம் தான்.
6வது முறை முதல்வர்
முதல்வர் ஜெயலலிதா மக்கள் பிரச்னைகளை கண்டு கொள்ளவே இல்லை. மக்கள் பிரச்னை
என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கு தீர்வு காண 93 வயதிலும் முயற்சி
செய்பவர் கலைஞர் கருணாநிதி என்றால் அது மிகையாது. தேர்தலுக்கு பின்னர் 6வது
முறையாக கருணாநிதி முதலமைச்சராக பதவியில் அமர்வார் என்றார்.
சிந்தித்து ஓட்டு போடுங்கள்
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஆவின்பால் விலை ஒரு லிட்டருக்கு ரூ.7 குறையும்.
மின்கட்டணத்தை மாதந்தோறும் கட்டலாம். மக்கள் இந்த தேர்தலில் சிந்தித்து
வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி
காத்திருக்கின்றனர். அதன்படி தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி
பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார் குஷ்பு.
Read more at: http://tamil.oneindia.com/
Read more at: http://tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக