ஞாயிறு, 18 ஜனவரி, 2026

நடிகர் விஜய் (டெல்லி) சிபிஐ முன்பு 2வது முறையாக ... டெல்லி சென்றடைந்தார் விஜய்

 தினமலர்: டில்லி புறப்பட்டார் விஜய் ; சிபிஐ முன்பு நாளை இரண்டாவது முறையாக ஆஜராகிறார்
சென்னை ; கரூர் துயரம் தொடர்பாக இரண்டாம் கட்ட சிபிஐ விசாரணை நாளை நடக்க உள்ளது . இந்த விசாரணைக்காக தவெக தலைவரும் , நடிகருமான விஜய் இன்று சென்னையில் இருந்து டில்லி புறப்பட்டார்
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நாற்பத்து ஒன்று பேர் பலியாகினர் . நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது


இது தொடர்பாக டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொது செயலாளர் ஆனந்த் , தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா , சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் ஆஜராகி விசாரணையை எதிர்கொண்டனர் . சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்தனர் . விஜய் பயணித்த பிரசார பஸ்சையும் , கரூர் விசாரணை அலுவலகத்திற்கு கொண்டு வந்த அதிகாரிகள் , அதன் உள்ளேயும் , வெளியேயும் ஆய்வு நடத்தினர் . தொடர்ந்து , தவெக தலைவர் விஜய்யை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது

அதை ஏற்று தொடர்ந்து ஜன . பன்னிரண்டாம் தேதி விஜய் டில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் . அவரிடம் பலமணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர் . மேலும் அவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் தரப்பு திட்டமிட்டு இருந்த தருணத்தில் பொங்கல் விடுமுறையை காரணம் காட்டி , அடுத்த நாட்களில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விஜய் விலக்கு கேட்டு இருந்தார்

இதையடுத்து , சிபிஐ அதிகாரிகள் ஜன . பத்தொன்பதாம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூற , டில்லியில் இருந்து விஜய் சென்னை திரும்பினார் . தற்போது பொங்கல் விடுமுறை முடிந்து விட்ட படியால் , சிபிஐயின் இரண்டாம் கட்ட விசாரணைக்காக அவர் இன்று ( ஜனவரி பதினெட்டு ) மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார் . அங்குள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கும் விஜய் , நாளைய தினம் சிபிஐ விசாரணையை எதிர்கொள்கிறார் . நாளைய முழு விசாரணைக்கு பின்னரே , அவரிடம் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படுமா ? என்பது தெரிய வரும் 

கருத்துகள் இல்லை: