ராதா மனோகர் : திமுக ஹிந்திக்கு எதிராக போராடி விட்டு இன்று ஆங்கிலத்திற்கு அடிமையாகி விட்டது என்று திடீர் தமிழ் பற்றாளர்கள் பலர் கண்ணீர் வடிக்கிறார்கள்!
இவர்களின் எஜமானர்கள் தமிழர்களின் வெற்றிகளை பார்த்து புழுங்குபவர்கள்.
இவர்கள் ஏவல் பேய்கள் மட்டுமே.
இந்த விடயம் பற்றிய எனது பழைய பதிவு ஒன்றுள்ளது.
இந்த திடீர் தமிழ் பற்றாளர்கள் அறிவு கண்ணை அக்கட்டுரை திறக்கும் என்று நம்புகிறேன்.
மீள் பதிவு : தமிழர்களின் ஆங்கில மொழி மேலாண்மைக்கு குறி
பெரியார் இருந்த காலத்தில் ஆங்கிலம் ஒரு மேட்டுக்குடி சொத்தாகவே இருந்தது .அதிலும் பார்ப்பன வீடுகளில் மிகவும் சாதாரணமாக புழக்கத்தில் இருந்தது . அறிவியல் நூல்கள் பெரிதும் ஆங்கிலத்தில்தான் இருந்தது
தமிழ் மட்டுமே வாசிக்க எழுத தெரிந்தவர்கள் இன்றைய வாட்சப் மேதாவிகள் ரகத்தில்தான் இருந்தனர்.
விஞ்ஞானம் மருத்துவம் போன்ற துறைகள் எல்லாம் தமிழ் மட்டுமே தெரிந்த சமூகத்தால் எட்டிவிட முடியாத உயரத்தில் இருந்தது.
இன்றும் உலகம் முழுவதும் பார்ப்பனர்கள் பரவி இருப்பதற்கு அவர்களின் ஒரு நூற்றாண்டு ஆங்கில கல்வியே பெரிய காரணமாக இருந்தது.
உதாரணமாக கமலா ஹாரிஸின் பாட்டன் இந்திய வெளியுறவு துறை அதிகாரியாக உலகம் முழுவதும் சுற்றினார் அவரின் மகள் சியாமளா அமெரிக்காவில் டாக்டராக செட்டில் ஆனார்.
சியாமளாவின் மகள் கமலா அமெரிக்காவின் இரண்டாவது பெரிய பதவிக்கு உயர்ந்தார்
இந்த பார்ப்பனர்கள் மண்ணின் மைந்தர்களை காலனி அடிமைகள் போலவே ஆண்டார்கள்.
அவர்களின் ஆதிக்கத்திற்கு அவர்களின் ஆங்கில மேலாண்மை மிகப்பெரிய காரணம் அதை அடித்து நொறுக்கியது திராவிட இயக்கம்
குப்பனும் சுப்பனும் ஆங்கிலம் பேசினால் அது ஒரு உலக மகா அதிசயமாக பார்க்கப்பட்டது.
ஆங்கிலம் தெரியாதவர்கள் படிக்காதவர்கள் என்ற கருத்து இருந்தது
அன்றைய காலக்கட்டத்தில் நவீன அறிவியல் மொழியாக ஆங்கிலமே இருந்தது.
மருத்துவம் படிப்பதற்கு சமாக்ஸ்க்ருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அளவில் பார்ப்பன ஆதிக்கம் இருந்த காலம் அது..
பெரியாரின் மொழி பற்றிய கருத்து ஒரு போர்முனையில் எதிரி மீது ஏவப்பட்ட ஆயுதமாக கருதவேண்டும்.
அந்த போரில் பெரியார் வென்றுவிட்டார் திராவிட இயக்கம் ஆங்கில கல்விக்கு கொடுத்த முக்கியதத்துவம் போற்றத்தகுந்தது
அது மட்டுமல்லாம்ல தமிழ் ஒரு நீச மொழி என்ற கூற்றையும் தவிடு பொடியாக்கி தமிழ செம்மொழி என்றாக்கியதும் திராவிட இயக்கத்தின் போர் வெற்றிகள்தான்.
பெரியார் சறுக்கினார் என்ற சொற்தொடர் புறமுதுகு கண்ட பார்ப்பனீயத்தின் ஆற்றாமையால் கட்டமைக்கப்படட சொற்தொடராகும் அதை பற்றிய வரலாற்று புரிதல் அற்று நம்மவர்களும் அதை கூறுவது வேதனைக்கு உரியது
ஒரு முறை பாஜக மதுவந்தி ஒரு காணொளியில் : உங்களுக்கெல்லாம் இப்போது இங்கிலிஷ் தெரியும் அதை ஒத்துகிறேன் என்று ஏகத்தாளமாக குறிப்பிட்டார் .
ஒடுக்கப்பட்ட மக்களின் வாயில் இருந்து ஆங்கிலம் வருகிறதே என்று இவர்கள் துடிப்பதுதான் பெரியாரின் வெற்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக