திங்கள், 7 டிசம்பர், 2020

அமெரிக்க மக்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி - டிரம்ப் அறிவிப்பு

dailythanthi : அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட தொடங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். 

வாஷிங்டன், உலகிலேயே கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரைக் கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பலி எண்ணிக்கையும் 3 லட்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.                         அதேசமயம் கொரோனா பரவும் அதே வேகத்தில் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் முழு மூச்சில் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் பைசர் மற்றும் மாட்டானா ஆகிய 2 நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையை முடித்து உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. இந்தநிலையில் அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில் , “தடுப்பூசி சாத்தியமில்லை என யாவரும் நினைத்திருந்தநிலையில், எங்களது தடுப்பூசி வந்து கொண்டிருக்கின்றன. இதை செய்து முடிக்க மற்றொரு நிர்வாகம் 5 வருடங்கள் எடுத்திருக்கும். ஆனால் நாங்கள் அதை 7 மாதத்தில் செய்து முடித்துள்ளோம். அவை அடுத்த வாரம் பயன்பட்டுக்கு வருகின்றன. நாங்கள் தடுப்பூசி போட தொடங்கப் போகிறோம். நிறைய பேருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை: