புதன், 22 ஜூலை, 2020

RSS Formula!.. பொய்களை பரப்பி நாட்டை சூறையாடும் குள்ள நரி கூட்டம்

Kandasamy Mariyappan : RSS Formula!
மாநிலத்தில் உள்ள பிரபலமான கட்சியின் மீது அபாண்டமாக ஒரு பொய் சொல்லனும், பிறகு அதை அப்படியே Maintain பன்னனும். எதிர்ப்புகள் பற்றி கவலைப்பட கூடாது! 10% மக்கள் இந்த பொய்யை ஏற்றுக் கொண்டால் போதும்!
News 18 விவாதத்தில் திரு. நாராயணன்...
70களில் தமிழ்நாடு வந்த திரு.மண்டல் அவர்களை திமுக தலைவர் திரு. மு. கருணாநிதி மற்றும் திராவிட கழக தலைவர் திரு.கி. வீரமணி இருவரும் பார்க்க மறுத்து விட்டனர் என்கிறார்.
News 18 திரு. குணா, அந்த சந்திப்பு நடந்த இடமே பெரியார் திடலில் தானே நாராயணன் என்கிறார்.
விவாதம் முடியும் பொழுதும் நாராயணன் மீண்டும் அதே பொய்யை கூறி முடிக்கிறார்.

News 7ல் திருமதி வானதி அவர்கள், சம்மந்தமே இல்லாமல்...
முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை திமுக ஆட்சியில் உருவானது என்கிறார்.
அதாவது 1983ல் அன்றைய கேரளா முதலமைச்சரும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு எம் ஜி ராமச்சந்திரனும் முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 130 அடியாக குறைப்பது என்று கையெழுத்திட்டனர். இதைத்தான் திமுக ஆட்சியில் நடந்தது என்கிறார்.
இன்று, News 7 நிகழ்ச்சியில் நாராயணன், News 18ல் கூறிய அதே பொய்யை மீண்டும் கூறுகிறார்.
இப்பொழுது ஒருபடி மேலே சென்று, வாஜ்பாய் மற்றும் அத்வானி அவர்கள் இருந்த மொரார்ஜி அமைச்சரவைதான் மண்டல் கமிஷன் அறிக்கையை வெளியிட்டது என்கிறார்.
மண்டல் கமிஷன் அமல்படுத்தியதால் திரு விபி சிங் ஆட்சி கலைக்கப்படவில்லை என்கிறார்.
இந்த பொய்களை சங்கிகள் WhatsAppல் பரப்புவார்கள்.
இப்படி பொய்யான தகவல்களை பரப்பி பிறகு அதை மக்களிடம் சேர்ப்பதே RSS Formula!

கருத்துகள் இல்லை: