ஞாயிறு, 19 ஜூலை, 2020

புலிகளின் 32 நிர்வாக துறையில் ஏன் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த எவரையும் நியமிவில்லை?

Reginold Rgi : இந்த பதிவு எவருடைய மனதையும் புண்படுத்துவதோ அல்லது பழிவாங்குதோ அல்ல வட - கிழக்கில் வாழ்கின்ற என் தாய் தமிழ் உறவுகள் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பதிவு .....
2004 ஆண்டு புலிகள் அமைப்புக்குள் ஏற்பட்ட கிழக்கு பிளவு பற்றியும் அந்த காலகட்டத்தில் நடந்தவை என்னவென்று வடகிழக்கில் வாழ்கின்றன மக்களுக்கு அவ்வளவாக தெரியாது எங்களிடம் பணபலம் இல்லை ஊடகபலம் இல்லையென்றாலும் எனது சத்திய எழுத்துகள் வருங்கால சந்ததியினருக்கு உண்மையை உணர்த்தும் என்று ...
யாழ் வன்னி நிலங்களை போர் மேகங்கள் சூழ்ந்து கொண்ட போதெல்லாம் யாழ் வன்னி மக்களை காப்பாற்ற கிழக்கிலிருந்து கனகச்சிதமாக பெரும் படைகளை நகர்த்தி அந்த மக்களுக்காக ரத்தம் சிந்தி போராடி விலை மதிப்பில்லாத உயிர்களையும் கொடுத்தவர்கள் என்ற ரீதியில் ஒரு சிலரின் மனசாட்சி கதவுகளைதட்ட முயற்சிக்கிறேன்....
கிழக்கு பிளவு....
கிழக்கு மாகாணத்திலிருந்து உருவாகிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பதில் புலிகள் தவறுக்குமேல் தவறிழைத்தனர் கிழக்கு பிளவை தாண்டிச்செல்லுதல் என்பதே கடைசிவரை புலிகளால் முடியாது போன ஒரே காரியம் என வரலாறு தன்பக்கங்களில் குறித்துக்கொண்டது அந்த காலகட்டத்தில் சுமார் 6000 மட்டு/அம்பாரை போராளிகள் கிழக்கு தளபதி கேணல் கருணாக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்தார்கள் தாங்கள் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து மட்டு/அம்பாரை மண்ணில் சிங்கள அரசுக்கு எதிராக போராடி அந்த மக்களின் காலடியில் மடிவதையே தாங்கள் இறுதி லட்சியமாக கொண்டுள்ளதாக 6000 போராளிகளும் கருணாவின் பின்னால் அணிவகுத்து நின்று கிழக்கு பிளவை அறிவித்தார்கள்


அந்த காலகட்டத்தில் கிழக்கில் இருந்தவன் என்ற ரீதியில் உண்மை வரலாற்றை உணர்த்துவதே எனது கடமையாக உணர்கிறேன்....
2004.01.01 அன்று கிழக்கில் நடந்த வருடப்பிறப்பு வைபவத்தில் கிழக்கு படையணிகள் மத்தியில் கருணா அம்மான் உரையாற்றும் போது "எனக்கு தலைவருடன் சேர்ந்து கொஞ்சவேலைகள் இருக்கின்றது இனி உங்களை ரோமியோசேரா' (கேணல் ரமேஷ் ) மற்றும் ராபேட் ( 15 ) தான் வழிநடத்துவார்கள் என்று கூறினார் இதன் கருத்து என்னவென்றால் விடுதலைப்புலிகளின் இராணுவ கட்டமைப்பில் தலைவர் பிரபாகரன் பாரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்த இருந்தார் இதன் அடிப்படையில் தமிழீழ கூட்டுப்படைத் தளபதியாக கேணல் கருணா நியமிக்கப்பட இருந்தார்

இது இவ்வாறு நிகழுமாயின் புலிகளின் இரண்டாம் நிலைக்கு கருணாவே வரக்கூடிய வாய்ப்பு இருந்தது ஆனால் புலிகளின் முக்கிய மூன்று தளபதிகள் மத்தியில் இரண்டாம் நிலைத் தளபதிகளுக்காக பனிப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது உதாரணமாக பொட்டம்மான் தலைமையில் ஒன்றுகூடல் வைத்தால் கடற்புலிகளின் தளபதி சூசை செல்லமாட்டார் ஏனெனில் சூசை பொட்டம்மானுக்கு கீழ்ப்பட்டவராக வந்து விடுவார் என்று இதே போன்று சூசையினால் ஒருங்கிணைக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு பொட்டம்மான் செல்லமாட்டார் இதற்கெல்லாம் ஆப்பு வைத்தாற்போல சமாதான காலத்தில் தலைவர் வந்து உரையாற்றவிருந்த கலந்துரையாடலில் தலைவருக்குப் பதிலாக கருணாம்மான் வந்து உரையாற்றியது மற்றைய தளபதிகள் மத்தியில் மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தன .

கருணாவின் திடீர் எழுச்சியை பொறுத்து கொள்ள முடியாத வன்னி தளபதிகள் ஒரு கிழக்கான் எப்படி இரண்டாம் நிலை தளபதியாக வரலாம் என்று தலைவர் பிரபாகரனிடம் கருணாவை பற்றி ஒன்றுக்கு இரண்டாக கருணாவின் வளர்ச்சி கண்டு கொள்ள முடியாத பொறாமையின் உச்சத்தில் இருந்த தமிழ்செல்வன் பொட்டு நடேசன் குழுவினரின் பிரதான வேலையே தலைவர் பிரபாகரன் காதில் கருணா அம்மானின் வளர்ச்சியை வேறு விதமாக போதிப்பது பிரபாகரனுக்கு கருணா மீது வெறுப்பு ஏற்ப்படும் விதமாக அதாவது புலிகள் அமைப்பின் அடுத்த தலைவர் கருணா ஆக கூடும் போராளிகள் மத்தியில் கருணாவுக்கு ஆதரவு அதிகம் என பிரபாகரனுக்கு காதில் ஓதி ஓதி கருணா அம்மான் மீது பிரபாகரனுக்கு வெறுப்பு ஏற்ப்பட வைத்ததுக்கு முழுக்காரணமே தமிழ் செல்வன்தான் பொட்டம்மான் குழுவினர்தான்
இனி கிழக்கு போராளிகள் பிரிவிற்கான காரணத்தை பார்ப்போம் புலிகளின் 32 நிர்வாக துறையில் ஏன்
மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களை சேர்ந்த எவரையும் நியமிவில்லை என்பது கிழக்கு போராளிகள் வன்னி களமுனையில் வன்னி தளபதிகளால் மட்டக்களப்பான் அம்பாரையான் என்று புறக்கணிக்கப்பட்டது 400 மேற்பட்ட மட்டக்களப்பு அம்பாரையை சேர்ந்த ஜெயந்தன் படையணி போராளிகள் வன்னி களமுனை காவலரண்களில் சென்றி பார்க்கிறார்கள்

இந்த சமாதான காலத்தில் எந்தவொரு வீரனும் தனது சொந்த இடத்தில் இருப்பதையும் தனது உறவுகளோடு இருப்பதையுமே விரும்புவான் என்ற குற்றச்சாட்டு ஒஸ்லோ ஒப்பந்ததில் அன்ரன் பாலசிங்கதை கையொப்பம் வைக்க தூண்டியதால் தலைவர் கருணாவுடன் முரண்பட்டு கொண்டு தலைவருக்கும் சொல்லமால் கிழக்குக்கு கருணா வந்தது கிழக்கிலிருந்து 1500 போராளிகளை வன்னி களமுனைக்கு அனுப்புமாறு தலைவர் பிரபாகரனிடம் இருந்து கட்டளை வந்தது கருணா இனி எந்த காரணத்தை கொண்டும் இங்கிருந்து படை நகர்த்த முடியாது இங்குள்ள பெற்றோர்கள் இதை விரும்பமாட்டார்கள் என்றது தவறான முறையில் நிதியை கையாண்டதாக கருணாவை வன்னிக்கு வருமாறு தலைவர் பிரவாகரனிடம் இருந்து அழைப்பு வந்தது அழைப்பை ஏற்று வன்னிக்கு செல்ல இருந்த கருணாவை செல்லவேண்டாம் என்று கிழக்கு தளபதிகள் தடுத்தார்கள் மற்றும் இன்னொரு விஷயம் என்னவென்றால்
இக்காலப் பகுதியில் கிழக்கில் விடுதலைப்புலிகளின் முதலீட்டுப் பொறுப்பாளராக இருந்தவர் குகநேசன் என்பவர் இவரின் கீழ் வேலை செய்தவர்தான் கம்சன். கம்சன் நிதிப்பிரிவில் இருந்த காலத்தில் அனுமதியில்லாமல் தனிப்பட்ட முறையில் சொத்துக்களை வாங்கியிருந்தார் இதனை கிழக்கில் இருந்த கருணா இதை உறுத்திபடுத்தி அதனை முடக்கியவேளை , கம்சன் பல கணக்குகள் அடங்கிய கோவைகளுடன் கருணா அம்மானுக்கு தெரியாமல் வன்னிக்கு சென்றார்
அவர் வன்னி சென்று காட்டிய கணக்குகள் கோவைகள் அடங்கிய கோவைகள் புலிகளின் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்திக்கு புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது ...  (தொடரும்)

கருத்துகள் இல்லை: