புதன், 22 ஜூலை, 2020

கலைஞர் கட்டமைத்த மின்சார மேலாண்மை .. ..முழு விபரம் .. பட்டியல்

A Sivakumar. : கலைஞரும் மின்சாரத்துறையும்
கலைஞரின் சாதனைகள் என்று துறைவாரியாக எல்லாத்தையும் எழுதுறீங்களே மின்சாரத்துறை பற்றி எழுதுங்களேன் என்று தம்பி Meera Sarkhan கேட்டிருந்தார்.
அதற்காக தகவல்களை தேட துவங்கியதும் தான் திமுக ஆட்சியில் மின் உற்பத்தி திட்டங்களே இல்லை, அதனால் மின்வெட்டினால் தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எத்தனை அபாண்டமானது என்று புரிந்தது.
காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டில் அணைகளே கட்டப்படவில்லை என்ற கேவலமான பொய்க்கு இணையான கேவலம் தான் இந்த மின்சாரம் தொடர்பான குற்றச்சாட்டும்.
அது எப்படி என்று புரிந்துக்கொள்ள திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை பார்க்கலாம்,
1. ஆழியாறு 60 MW மின் திட்டம், 1970
2. கோதையாறு (Power House I) 60 MW மின் திட்டம், 1970
3. சோலையாறு 95 MW மின் திட்டம், 1971
4. கோதையாறு (Power House II) 40 MW மின் திட்டம், 1971
5. வைகை 6 MW மின் திட்டம், 1990
6. கீழ் பவானி 8 MW மின் திட்டம், 1990
7. கீழ் பவானி (RBC) 8 MW மின் திட்டம், 1998
8. குந்தா பவர் ஹவுஸ்-6 (Unit 1), 30 MW மின் திட்டம், 2000
9. முக்குருத்தி Micro Power House (Unit 1), 350 KW மின் திட்டம், 2001
10. பவானி கட்டளை பேரேஜ்-II, 30MW, 2011
11. பெரியாறு வைகை மினி - I, 4 MW, 2011

12. 7 சர்க்கரை ஆலைகளில் 162 MW திறன் கொண்ட இணைமின் உற்பத்தி திட்டங்கள்
13. திருவண்ணாமலை அருணாசலம் சர்க்கரை ஆலையில் 19 MW திறன் கொண்ட இணைமின் உற்பத்தி திட்டம்
14. காஞ்சிபுரம் பழைய சீவரம் 12 MW திறன் கொண்ட இணைமின் உற்பத்தி திட்டம்
15. ஈரோடு வேலம்பாளையம் 10 MW திறன் கொண்ட மின் உற்பத்தி திட்டம்
16. சூரிய சக்தி மூலம் 165 KW திறன் கொண்ட மின் உற்பத்தி திட்டங்கள்
17. பேசின் பிரிட்ஜ் 196 MW திறன் கொண்ட டீசல் என்ஜின் மின் உற்பத்தி திட்டம்
18. சாத்தனூர் 7.5 MW திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டம்
19. Parsan's Valley 30 MW திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டங்கள்
20. திருமூர்த்தி 1.95 MW திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டம்
21. முக்குருத்தி 0.70 MW திறன் கொண்ட புனல் மின் உற்பத்தி திட்டம்
22. நெய்வேலி 250 MW திறன் கொண்ட பழுப்பு நிலக்கரி கூடுதல் மின் உற்பத்தி திட்டம்
23. ஜெயங்கொண்டம் 500 MW திறன் கொண்ட அனல் மின் உற்பத்தி திட்டம்
24. சாமல்பட்டி 106 MW மின் திட்டம்
25. பிள்ளைப்பெருமாள் நல்லூர் 330 MW மின் திட்டம்
26. சமயநல்லூர் 106 MW மின் திட்டம்
27. திருவாரூர் 107 MW மின் திட்டம்
28. எண்ணூர் 330 MW அனல் மின் திட்டம்
இந்த திட்டங்கள் அனைத்தும் 1969-1976 & 1996-2001 திமுக ஆட்சிக்காலம் வரை உருவானவை. 1996ல் திமுக ஆட்சி தொடங்கும் போது நுகர்வோரின் தேவையை ஈடு செய்த உச்ச மின் அளவு 4424 MW ஆகா இருந்தது, 2001ல் 5932 MW என்று உயர்ந்திருக்கிறது, அதாவது 1508 MW உயர்வு (மூன்றில் ஒரு பங்கு உயர்வு).
காற்று, சூரிய சக்தி, கரும்பு சக்கை போன்ற இணைமின் உற்பத்தி திட்டங்களுக்கு முழு வரிவிலக்கும் அளித்திருக்கிறார் கலைஞர்.
SCADA திட்டம்:
சென்னையில் உள்ள 96 துணை மின்நிலையங்களையும் ஒன்றாக இணைத்து எங்கெங்கு கூடுதல் மின்சாரம் இருக்கிறதோ அதை அங்கிருக்கும் மின்மாற்றி மூலம் மின்சாரம் தேவைப்படும் இடத்திற்கு மாற்றி மின்னோட்டத்தை சீராக்குவதற்காக சென்னையில் கொண்டு வரப்பட்ட புதிய திட்டம் தான் Supervisory Control & Data Acquisition System (SCADA).
அதற்கடுத்து 2001-2006 அதிமுக ஆட்சி.
2006-2011ல் மீண்டும் திமுக ஆட்சி. அந்த 5 ஆண்டுகளில் கலைஞர் அமல்படுத்திய திட்டங்கள்.
1. வல்லூர் 500 MW அனல்மின் நிலையம் (அலகு 1), 2007
2. வல்லூர் 500 MW அனல்மின் நிலையம் (அலகு 2), 2007
3. ராமநாதபுரம் 92 MW எரிவாயு மின் திட்டம், 2008
4. வடசென்னை 500 MW அனல்மின் நிலையம் (அலகு 1), 2008
5. வடசென்னை 500 MW அனல்மின் நிலையம் (அலகு 2), 2008
6. மேட்டூர் 500 MW அனல் மின் நிலையம், 2008
7. வல்லூர் 500 MW அனல்மின் நிலையம் (அலகு 3), 2009
8. தூத்துக்குடி 500 MW அனல்மின் நிலையம் (அலகு 1), 2009
9. தூத்துக்குடி 500 MW அனல்மின் நிலையம் (அலகு 2), 2009
10. உடன்குடி 1600 MW அனல்மின் நிலையம்,2009
இது போக சர்க்கரை ஆலைகளில் கூடுதலாக 21 MW திறன் கொண்ட மின் உற்பத்தி திட்டங்கள், மின் பகிர்மானத்துக்கு 233 துணை மின் நிலையங்கள் என்று திமுக ஆட்சியில் உருவாகியிருக்கிறது.
கலைஞரின் மின் உற்பத்தி திட்டங்களுக்கெல்லாம் மகுடம் போன்றது காடம்பாறை நீர் மின் உற்பத்தித் திட்டம்.
வால்பாறை உச்சியில் உள்ள "நீரார் அணை" கட்டப்பட்டது காமராஜரால். ஆனால் இதனால் தமிழகத்திற்கு எந்தவொரு பயனும் இல்லை. ஏனெனில் அணை மதகுகள் திறக்கப்பட்டதும் தண்ணீர் கேரள எல்லையைத் தொட்டுவிடும். இந்தத் தண்ணீர் தான் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கான மூலாதாரம்.
அதன்பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க-வின் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்ற கலைஞர் அவர்கள் அந்த அணைக்கு எதிர்ப்புறம் மலையைக் குடைந்து அந்த தண்ணீரை சோலையாறு அணைக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டி அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடர்ந்தார்.
20-அடிக்கு 20-அடி என்ற அளவில் "D" போன்ற அமைப்பில் 8.5 கி.மீட்டர் தூரத்துக்கு ஒரே நேர்கோட்டில் வெட்டப்பட்ட குகைக் கால்வாய் இது. பராமரிப்பு பணிகளுக்காக இந்த குகைக்குள் முழு 8.5 கி.மீட்டருக்கும் இன்றும் டிராக்டரில் பயணிக்கிறார்கள்.
அடுத்து பேரறிஞர் மறைய முதல்வராக கலைஞர் பதவியேற்க, சாதிக்பாட்சா அவர்கள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்து இத்திட்டத்தை முடித்து வைத்தார். கலைஞர் திறந்து வைத்தார். இந்த காலகட்டம் 1968 முதல் 1972 வரை ஆகும்.
இந்தத் தண்ணீர் மலைக்குகையை விட்டு வெளியேறிய பின்னர் அதே பாதையில் "நீர் மின்சாரம்" உற்பத்தி செய்யப்படுகிறது. அது தான் 400 MW திறன் கொண்ட "காடம்பாறை நீர் மின் உற்பத்தித் திட்டம்" ஆகும்.
தமிழ்நாட்டின் மொத்த நீர் மின் உற்பத்தியான 2284 MW-ல் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் மட்டும் மொத்தம் 866 MW உற்பத்திக்கான திட்டங்கள் உருவாகியிருக்கின்றன. அதாவது 3ல் ஒரு பங்கு நீர் மின் உற்பத்தி நிலையங்கள் கலைஞர் உருவாக்கியதே!
இதை Tangedco இணையதளத்தில் Hydro Stations பக்கத்தில் போய் பார்க்கலாம்.
இப்படியெல்லாம் மின் உற்பத்தி, மின் பகிர்மான திட்டங்களை கொண்டுவந்த தலைவர் கலைஞர் இதன் மூலம் மக்களுக்கு என்ன திட்டங்களை தந்திருக்கிறார்?
அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு திட்டம், 1969-76
குடிசைக்கு ஒரு மின்விளக்கு திட்டம், 1969-76
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 1989-91
இலவச மின்சாரம் விரயமாவதை தடுத்திட சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாக மின் மோட்டார்
பெரு விவசாயிகளுக்கு 50% மானியமாக மின் மோட்டார்
கைத்தறி & விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்
ராஜீவ் காந்தி கிராமப்புற மின்மயமாக்கல் திட்டம்
ஆக, தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் போது மின்வெட்டு என்று இனியும் யாரேனும் குற்றம் சொன்னால் அவர்களிடம் நாம் கேட்க வேண்டிய கேள்வி மாண்புமிகு புரட்சித்தலைவி இரும்பு பெண்மணி அம்மா அவர்களின் 15 ஆண்டு பொற்கால ஆட்சியில் (1991-96, 2001-06 & 2011-16) தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட மின் உற்பத்தி திட்டங்கள் எத்தனை என்பது மட்டும் தான்.
#FatherofModernTamilnadu
#HBDKalaignar
#TNEB
#MKFacts

கருத்துகள் இல்லை: