
இழப்பீட்டு தொகையை செலுத்தியதால் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது.
இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
மேலும், போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின் முகாம் அலுவலகமாக மாற்ற சாத்தியம் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,
வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ.தீபா பேசியதாவது:-
* வேதா இல்லம் அரசுடைமையாக்கப்படுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
* முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தும் வேதா இல்லத்தில் தான் நடைபெற்றன.
* பூர்வீக சொத்தை அரசு எடுத்துக்கொள்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை
* வேதா இல்லம் எங்களுடைய பூர்வீக சொத்து
* ஜெயலலிதாவின் வாரிசாக எங்களை நீதிமன்றமே அறிவித்துள்ள நிலையில் வேதா இல்லத்தில் எங்களுக்கே உரிமை உள்ளது
* தமிழக அரசின் நடவடிக்கை அத்துமீறிய செயல். வீட்டின் மதிப்பை நிர்ணயித்ததை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
* வேதா இல்லத்திற்கான மதிப்பீடு தொகை ரூ.68 கோடி என்பது தவறானது
* எந்த அடிப்படையில் வேதா இல்லத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது?
* இழப்பீடு என்று அரசு கூறியுள்ள தொகையை ஏற்றுக்கொள்ள முடியாது.
* வேதா இல்லத்திற்குள் இருக்கும் பொருட்களின் விவரங்களை அரசு வெளியிடாதது ஏன்..?
* ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட கடனுக்கு நாங்கள் தான்
பொறுப்பேற்றுள்ளோம்
* இல்லம் அரசுடமையாக்குவதை எதிர்க்கிறோம். இது தொடர்பாக சட்ட ரீதியாக மேல்முறையீடு செய்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக