புதன், 22 ஜூலை, 2020

டெல்லியில் நான்கில் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று - அதிர்ச்சி

பெரும்பாலான மக்கள் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றைக் கொண்டிருக்கின்றனர்BBC : கொரோனா வைரஸ்: டெல்லியில் நான்கில் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று - அதிர்ச்சி தரும் ஆய்வு பெரும்பாலான மக்கள் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றைக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வசிப்பவர்களில் நான்கு பேரில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் எனப் பரவலாக எடுக்கப்பட்ட ஆண்டிபாடி பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. டெல்லியில், 21,387 பேரிடம் எடுக்கப்பட்ட கோவிட்-19 'ஆண்டிபாடி' பரிசோதனையில் 23.48 சதவீதம் பேரின் உடலில் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு அணுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ள எண்ணிக்கையை விட, டெல்லியில் கொரோனா தொற்று இன்னும் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை: