ஞாயிறு, 19 ஜூலை, 2020

கொரோனா: `Double-blind' முறையில் மனிதப் பரிசோதனை! - முக்கிய கட்டத்தில் கோவாக்ஸின்

கோவாக்ஸின் விகடன் : இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ICMR) இதுவரை 2 தடுப்பூசி மருந்துகளுக்கு மனிதப் பரிசோதனை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட உலகம் முழுவதும் தடுப்பூசி மருந்துக்கான ஆராய்ச்சியும், மனிதப் பரிசோதனைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்திய கண்டுபிடிப்பான கோவிட்-19 தடுப்பு மருந்து கோவாக்ஸினுக்கான (COVAXIN) மனிதப் பரிசோதனை தற்போது தொடங்கியுள்ளது. இந்தத் தடுப்பூசியைக் கண்டுபிடித்த பெருமையைப் பெறுகிறது ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக், நிறுவனம் இந்தியாவின் முதல் கோவிட்-19 தடுப்பூசி மருந்தான கோவாக்ஸினுக்கான முதல்கட்ட ஆராய்ச்சி நாடு முழுவதும் ஜூலை 15-ல் ஆரம்பித்தது. மனிதப் பரிசோதனைக்காக இதில் 375 தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர் .
ஆராய்ச்சியின்போது ஒரு பிரிவினருக்கு, தடுப்பூசி மருந்து செலுத்தப்படும் மற்றொரு பிரிவினருக்கு மருந்தற்ற மருந்து (placebo) செலுத்தப்படும்.
Double-blind முறையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவதாகச் சொல்கிறார்கள். அதாவது ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சியாளருக்கும், தன்னார்வலர்களுக்கும், யாருக்குத் தடுப்பூசி மருந்து அளிக்கப்படுகிறது யாருக்கு மருந்தற்ற மருந்து அளிக்கப்படுகிறது என்று அறியாமல் ஆராய்ச்சி மேற்கொள்ளும் முறை இது.
Corona (Representational Image)இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ( ICMR) இதுவரை 2 தடுப்பூசி மருந்துகளுக்கு மனிதப் பரிசோதனை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளது .
பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கூட்டு முயற்சியில் உருவான கோவாக்ஸின் மற்றும் சைடஸ் காட்லியா சுகாதார நிறுவனத்தின் கண்டுபிடிப்பான தடுப்பூசி மருந்தையும் முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட மனிதப் பரிசோதனைக்கு உட்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு தடுப்பூசி மருந்துகளும் எலி, பெருச்சாளி, முயல், ஆகியவற்றுக்குச் செலுத்தப்பட்டு வெற்றிகரமான பரிசோதனையை முடித்ததையடுத்து தற்போது மனிதப் பரிசோதனைக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்கவா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: