திங்கள், 18 மே, 2020

கைகள் கட்டப்பட்ட நிலையில் சாலையில் கிடந்த மருத்துவர் .. ஆந்திரா

Devi Somasundaram :; · போலிஸ் ,ஒரு டாக்டரை அடிச்சு கீழ தள்ளி சட்டைய
கழட்டி அவமானப் படுத்தி ....அப்படி என்ன செய்தார்னு கேட்கறிங்களா. திருடல,கொலை செய்ல, எந்த குழந்தை வன்புணரல, லஞ்சம் வாங்கல ....பின்ன .... ..PPE கிட் ஷார்ட்டேஜ், N95 ஷார்டடேஜ் பத்தி அதிகாரிகளுக்கு தொடர்ந்து கடிதம் எழுதினார் ... .அதான் அவர் செய்த தேசிய குற்றம் ....கை தட்றது , ராணுவம் பூத் தூவுறது லாம் எத்தனை போலியானவை என்பதே ...இதுலாம் எங்கன்னு கேட்கறிங்களா ...இண்டியன் ஹீரோன்னு சில்லறய செதற விட்டிங்களே அதே ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சில தான்....
வெப்துனியா :ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் சுதாகர், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இன்று தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 விசாகபட்டிணம் மாவட்டம் நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் சுதாகர், தாம் பணிபுரிந்த மருத்துவமனையில் போதுமான முகக் கவசங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து மருத்துவர் சுதாகர் காயமான நிலையில், நேற்று மாலை நரசிபட்டிணம் தேசிய நெடுஞ்சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் கிடந்துள்ளார்.
 பின்னர்,போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.அங்கு மருத்துவர் அடிக்கடி மனரீதியாக பாதிக்கப்பட்டவராக நடந்து கொண்டுள்ளார். இதை யடுத்து, அவரை கிங் ஜார்ஜ் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் சுதாகர் மது அருந்தியிருப்பதை கண்டுபிடித்து மேலும் பரிசோதனை செய்து வருகின்றன

கருத்துகள் இல்லை: