செவ்வாய், 19 மே, 2020

தமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா.. மொத்தம் 11 ஆயிரத்து 760

நக்கீரன் :சென்னை: தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 760 ஆக இருந்தது.
மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 406 பேர் குணமடைந்திருந்தனர்.
ஆனாலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 81 இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது . அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 448 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை: