செவ்வாய், 19 மே, 2020

பத்மபிரியா, ஹேமபிரியா.. ஒரே ரூமில்.. ஒன்றாக தூக்கில் தொங்கிய இரட்டையர்கள்.. காட்பாடி!

Hemavandhana tamil.oneindia.com :  வேலூர்: பத்மபிரியா, ஹேமபிரியா.. சகோதரிகள் இருவருமே ஒரே ரூமில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் காட்பாடியில் நடந்துள்ளது.
காட்பாடியை சேர்ந்தவர்கள்தான் பத்மபிரியா, ஹேமபிரியா.. இருவரும் இரட்டையர்கள்.. பிளஸ் 2 படித்து வருகிறார்கள். இவர்களுக்கு பொது தேர்வு நெருங்கி விட்டதால் வீட்டில் இவ்வளவு நாள் படித்து கொண்டிருந்தனர்.

இன்றும் படிப்பதாக சொல்லி, 2 பேரும் வீட்டின் மாடியில் உள்ள ரூமுக்கு சென்றனர்.. ஆனால், ரொம்ப நேரமாகியும் 2 பேருமே திரும்பி வரவில்லை.. அதனால் வீட்டில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து மாடிக்கு சென்று பார்த்தனர்..
அப்போதுதான் 2 பேருமே தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அலறி துடித்தனர்.. எதற்காக இப்படி செய்து கொண்டார்கள் என உடனடியாக தெரியவில்லை.
தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இரட்டை சகோதரிகளின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினர்..

இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர். இரட்டையர்கள் 2 பேரும், ஒரே சமயத்தில், ஒரே அறையில், ஒன்றாக தூக்கு போட்டு கொண்டது சோகம், அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. போலீசார் இது சம்பந்தமான விசாரணையை துரிதமாகவே தொடங்கி உள்ளனர்.. இனிமேல்தான் இவர்களின் சோக முடிவுக்கு காரணம் என்னவென்று தெரியவரும்

கருத்துகள் இல்லை: