சனி, 23 மே, 2020

அதிமுக அரசு மீதான ஊழல் புகார் பயத்தில் ஆர் எஸ் பாரதி கைது ..

Nilavinian Manickam : ஆர்_எஸ்_பாரதி_கைது_ஏன்?
நூறு நாட்களுக்கு முன்பு பேசியதற்கு விளக்கமும் வருத்தமும் தெரிவித்த கருத்துக்கு இன்று காலை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.
அதுக்கு காரணங்கள் :
➡️➡️ "நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்றுள்ள ரூ.1165 கோடி ஒப்பந்த ஊழலில் தொடர்புடைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ஊழல் கண்காணிப்பு &; தடுப்புப் பிரிவு ஆணையரிடம் புகார்.
➡️➡️ "200 கோடி ஊழல் : கோவையில் கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்துள்ளது" என்று நேற்று அறிக்கை விடுத்தார். வழக்கும் தொடுக்க போவதா சொல்லியிருக்கிறார்.
அறிக்கை விடுத்த 12 மணிநேரத்தில கைது.
.அடுத்து சில கேள்விகள் தமிழக அரசுக்கு :
❓ ஹைக்கோர்ட்டை இழிவு படுத்திய ஹெச்.ராஜாவையும்..
❓பெண்களை இழிவு படுத்திய எஸ்.வி.சேகரையும்.. (முன்ஜாமீன் வாங்கும் வரை தேடிக்கொண்டே இருந்தது காவல்துறை)
❓ எடப்பாடியையும் - பன்னீர்செல்வத்தையும் 'Impotent' அதவாது 'ஆண்மையற்றவர்கள்' என்று விமர்சித்த ஆடிட்டர் குருமூர்த்தியையும்.. ❓பழங்குடியின சிறுவனை அழைத்து தன் செருப்பை கழட்டி சொன்ன திண்டுக்கல் சீனிவாசனையும்.. கைது செய்யாதது ஏன்..?
இவர்களை கைது செய்ய வக்கற்றுப்போன தமிழக அரசு ஏன் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தது..?

விடை : ஆர்.எஸ்.பாரதி எடுத்த எந்த வழக்கையும் அவ்வளவு சுலபமாக விட மாட்டார்.. அவர் தொடுக்க போகும் அடுத்த வழக்கும் அப்படி.. அந்த பயத்தில் தான் இந்த கைதும் நடந்தேறியுள்ளது. சீப்பை ஒளித்துவிட்டால் கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்று என்கிறார்கள்.. நான் மிசாவை கண்டவன், கலைஞரோடு பல முறை சிறை சென்றவன், மிரட்டலுக்கு பயந்து விட மாட்டேன், திட்டமிட்டபடி வழக்கு தொடரும் - ஆர்எஸ் பாரதி

முகநூல் செய்திகள்  
Stalin Thayanidhi
.ர: ஜீ பாத்தீங்களா எங்க ஆளுமையாரின் ஸ்கெட்ச் அ?
மீ: ஸ்கெட்ச் எங்க அமைப்பு செயலாளருக்கு இல்லடா மடையா உங்க தர்மயுத்தத்துக்கு
ர.ர : எப்படி ஜீ?
மீ : கோவைல கொரோனா நேரத்துல 4000 ரூபாய் ஸ்ப்ரேயர் 16000 ரூபாய்னு பில் குடுத்தது ப்ளீச்சிங் பவுடர் வாங்குனதுல ஊழல் செஞ்சது அப்புறம் ஓபிஎஸ் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்து இருக்காருனு நேத்து ஒரு புகார் சொல்லி இருந்தார் எங்க அமைப்பு செயலாளர். அது மட்டும இல்லாம ஆதாரங்கள் திரட்டி இரண்டொரு நாளில் வழக்கு போட போறதா சொன்னாரு.
ர.ர : அதுக்கும் இந்த கைதுக்கு என்ன சம்மந்தம் ஜீ?
மீ : ஒரு ஊழல் வழக்குனு புகார் மட்டும் குடுத்துட்டு சும்மா இருந்துட்டா என்ன பன்றது‌. இந்த மாதிரி கைது நடவடிக்கை எடுத்தா தான இந்த வழக்க எங்க ஆளுங்க இன்னும் தீவிரமா எடுப்பாங்க. இந்த ஊழல வெளி கொண்டு வந்ததால தான எங்க அமைப்பு செயலாளர் கைதுனு ஊர்ல இருக்கவங்க எல்லாரும் பேசுவாங்க. எப்படி பார்த்தாலும் சிக்கல் வேலுமணிக்கும் தர்மயுத்தத்துக்கும் தான்.
ர.ர: அய்யயோ அப்போ நிஜமாவே ஸ்கெட்ச் அவங்களுக்கு தான.
மீ : அட ஆமாடா மடையா. அவங்க மேல சிஎம் க்கு என்ன காண்டோ. சூப்பரா கோர்த்து விட்டு இருக்கார்.

கருத்துகள் இல்லை: