
டாஸ்மாக் 55 நாட்களாக திறக்காத தமிழகத்தில் வன்முறை எண்ணிக்கை குறைந்தே இருந்தது.. யாரும் வீடுகளை விட்டு வராததாலும், கொரோனா அச்சத்தாலும் திருடுவதும், பெண்களை மானபங்கப்படுத்துவதும் இல்லாமல் இருந்தது.
ஆனால் டாஸ்மாக்கை திறந்த
அன்றே மாவட்டங்களில் ரத்தவாடை வீச தொடங்கிவிட்டது.. கொலை, குத்துகள்,
சர்வசாதாரணமாக இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன..
நாளுக்கு நாள் குடிமகன்களின் அட்டகாசமும் பெருகியபடியே உள்ளது.
தாய் குடிமகன்குடிக்க
பணம் தர மறுத்த பெற்ற தாயின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றுள்ளார்
இளைஞர்.. இந்த வீடியோதான் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பனங்கரை பகுதியை சேர்ந்தவர் வினோ...
கூலி தொழிலாளி.. கடை திறக்காத வரை வீட்டுக்குள்ளேயே பெட்டி பாம்பாக
கிடந்தவர், கடை திறந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார்.> நிவாரண நிதி
தண்ணி அடிக்க பணம் கேட்டு தொல்லை பண்ணுவது, பிறகு மூக்கு முட்ட குடித்துவிட்டு வந்து திரும்பவும் பணம் கேட்டு அடிப்பது என்று இதே வேலையாக இருந்திருக்கிறார்.. இந்நிலையில், அரசு வழங்கிய 1000 ரூபாய் நிவாரண தொகையை அம்மா வாங்கி வந்திருக்கிறார்.. அந்த பணத்தை தண்ணி அடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.. வீட்டு செலவுக்கும், சாப்பாட்டுக்கும் பணம் இல்லை என்று சொல்லி, அதை அவர் தர மறக்கவும், வினோவுக்கு ஆத்திரம் வந்துள்ளது.

>இப்படி புடவையை கிழித்து, இழுத்து அடாவடி செய்தபோது வினோ போதையில் இருந்தார்.. மேற்கொண்டு தண்ணி அடிக்க பணம் தேவைப்படவும்தான் கொலை செய்ய முயன்றுள்ளார்.. இந்த சம்பவத்தை அங்கிருந்தோர் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டுவிட்டனர்.. இதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.. இன்னும் எத்தனை குடும்பம் இந்த குடியால் நாசமாக போகிறதோ!?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக