சனி, 23 மே, 2020

ஆர் எஸ் பாரதி விடுதலை . வழக்கு உய ர்நீதிமன்றத்தில் இருப்பதால்

மாலைமலர் :  திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு சென்னை குற்றவியல்
முதன்மை நீதிபதி செல்வகுமார் இடைக்கால ஜாமீன் வழங்கினார்,
திமுக மூத்த வழக்கறிஞர் NR இளங்கோ நீதிமன்றத்தில் வாதிடும்போது இவ்வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது எனவும், அதில் பாரதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரியுள்ளோம், தேவைப்பட்டால் அவர் நேரில் ஆஜராக தயாராகவுள்ளதாகவும் கூறியுள்ளோம், இந்நிலையில் அவரது கைது சட்டத்திற்கு எதிரானது, அதிமுக அரசின் ஊழலை அவர் வெளிக்கொண்டு வருவதால் கைது செய்யப்பட்டுள்ளார் என என்ஆர் இளங்கோ வாதிட்டார், மேலும் குற்றவியல் நடைமுறை சட்டம் 41A ன் படி 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வழக்கில் முதலில் சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும், இவை கடைபிடிக்காததால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார் என் ஆர் இளங்கோ. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது

கருத்துகள் இல்லை: