திங்கள், 23 மார்ச், 2020

தமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அதற்கு தெரிவதில்லை

Arunachala Murthi : இது ஒன்றை கழித்துவிட்டால் நிர்வாகமே ஆட்டம்
கண்டுவிடும்..!!அவர்களை சீண்ட வேண்டாம், ஆங்கில இணையம் கொடுத்த அதிரடி ரிப்போர்ட்.....
மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..! தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்..தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்..
ஒட்டுமொத்த இந்தியாவின் ஜி.டி.பி அளவையும் ஒப்பிடும் போது வடகிழக்கு மாநிலங்கள் மொத்தமாக சேர்ந்து அளிக்கும் வருமானத்தை விட தமிழ்நாட்டின் வருமானம் அதிகம் என்கின்றது புள்ளிவிவரம்
இந்தியாவிலேயே செல்வ வளம் கொழிக்கும் மஹாராஷ்டிராவுக்கு அடுத்து 155 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவுக்கு வருமானத்தை கொடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே.
1960-ல் இந்தியாவின் ஏழை மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு. இன்று இந்தியாவின் முதல் ஐந்து பணக்கார மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்பது குறிபிடத்தக்கது
ஒருவேளை இந்தியா தமிழ்நாட்டை தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என்று ஆங்கில இணையதள ஆய்வு தெரிவிக்கிறது.

ஆட்டோ மொபைல், அரிசி விவசாயம், தோட்டங்கள், சுற்றுலா.,ஆயத்த உடைகள் ஏற்றுமதி, இந்தியா முழுவதுமான பட்டாசு உற்பத்தி, துப்பாக்கி டாங்கி தொழிற்சாலை, ஹிந்திக்கு அடுத்தப்படியாக சினிமா தொழிற்துறை,
டெல்லிக்கு பிறகு அனைத்து நாட்டு தூதரகங்களும் உள்ள ஒரே மாநிலம் தமிழகம் என்பது மிக முக்கியமானது
ஆன்மீகத்தில் மிக முக்கிய கோவில்கள், வரலாற்று இடங்களை கொண்டுள்ளது தமிழகம்...
உலக நாடுகளில் கிட்டத்தட்ட 5 நாடுகளில் தேசிய மொழியாக உருவெடுத்துள்ள மொழி தமிழ்...இரண்டாம் மொழியாக அங்கீகாரத்துக்கு 20 நாடுகளில் காத்திருக்கும் ஒரே மொழி தமிழ்.
தமிழ்நாடு யானை போன்றது. துரதிஷ்டவசமாக அதன் பலம் அதற்கு தெரிவதில்லை..

1 கருத்து:

நான் தமிழன் சொன்னது…

இதை தெரிந்த பின்னரே நம்மை இந்து மதத்தை சொல்லி பிரித்தாலும் சூழ்ச்சியை செய்கிரார்கள் சாதிப்பிரிவினை வேறு எதும் செய்யததின் காரணமே இது தான்