
இஸ்லாமிய அரசின் தகவல்படி காஷ்மீரில் முஸ்லிம்களின் அவல நிலைக்கு பழிவாங்குவதற்காக மார்ச் 25 குருத்வாரா தாக்குதலை அல் இந்தி நடத்தி உள்ளார், ஆனால் இது பாகிஸ்தானின் ரகசிய நடவடிக்கை ஆகும் என்பதைக் குறிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஐ.எஸ்.கே.பி தகவல்படி இந்தியர்களை
பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த பாகிஸ்தான் தொடர்ச்சியான வேலை
செய்கிறது.. அல் இந்தியின் உண்மையான பெயர் முஹ்சின் திரிகாரிபூர் அல்லது
முகமது முஹாசின் நங்கரத் அப்துல்லா (அவரது யுஏஇ சுகாதார அட்டை படி) என்றும்
அவர் மார்ச் 19, 1991 அன்று கேரளாவின் காசர்கோடு நகரில் பிறந்தார் என்றும்
பயங்கரவாத எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 29 வயதான இவர்
காசர்கோடு திரிகாரிப்பூரில் ஒரு சிறிய இரும்புக் கடை நடத்தும் ஒரு
குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.
2007 ஆம் ஆண்டில்
திரிகாரிபூரை விட்டு வெளியேறி, பெங்களூர் மலேசியா என சுற்றி துபாயில்
குடிபெயர்ந்தார். அவர் மலேசியாவிலும் துபாயிலும் என்ன செய்து
கொண்டிருந்தார் என்பது குறித்த விவரங்கள் மறைமுகமாக உள்ளன, இருப்பினும்
அவர் மலேயாசியாவிலும், பெங்களூருவிலும் ஒரு ஓட்டலில் பணிபுரிந்தார் என்று
நம்பப்படுகிறது.
புலனாய்வு அதிகாரிகள் முஹாசின்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்றார், அங்கு அவர் ஐக்கிய அரபு
எமிரேட்ஸில் தீவிரமயமாக்கப்பட்ட பாகிஸ்தான் குழுக்களுடன் தொடர்பு கொண்டார்.
அவர் லஷ்கர்-இ-தொய்பாவுடன் இருந்தார், ஆனால் பின்னர் ஆப்கானிஸ்தான்
மற்றும் சிரியாவில் உள்ள இஸ்லாமிய அரசில் சேர்ந்தார். ஆறு மாதங்களுக்கு
முன்பு, முஹாசின் கேரளாவிலுள்ள தனது தாயை தொடர்பு கொண்டு தான்
ஆப்கானிஸ்தானில் இருப்பதாகக் கூறி உள்ளார்.
"குடும்பத்தினர்
அவரிடமிருந்து கடைசியாக கேட்டது இதுதான்" என்று பெயர் குறிப்பிட விரும்பாத
மூத்த கேரள அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக