
இந்நிலையில், “நாம் கடுமையான பொருளாதாரப் பின்னடைவுக்குள் நுழைந்துள்ளோம்” என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கூறியுள்ளார். நேற்று (மார்ச் 27) ஆன் லைன் மூலம் உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, “கொரோனா வைரஸ் தொற்று உலகப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ளது,
இது வளரும் நாடுகளுக்கு மிகப் பெரிய நிதித் தேவையை ஏற்படுத்தும். 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலையை விட இனி வரும் காலங்கள் மோசமாக இருக்கும். உலககே பொருளாதார மந்தநிலைக்குள் நுழைந்தோம் என்பது தெளிவாகிறது" என்று அவர் ஒரு ஆன்லைன் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும் அவர் "வளர்ந்து வரும் சந்தைகளின் ஒட்டுமொத்த நிதித் தேவைகளுக்கான நிதியின் மதிப்பீடு 2.5 டிரில்லியன் டாலர். 80 க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திடம் அவசர உதவி கோரியுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.
-வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக