திங்கள், 23 மார்ச், 2020

100 ஆண்டு சாதனையாளர்களுக்கு திருட்டு திராவிட பட்டம் ! பள்ளிகளை மூடியோர்களுக்கு மூதறிஞர்கள் பட்டம்

Muralidharan Pb : 100 ஆண்டுச் சாதனை.
இன்றைய அலோபதி மருத்துவம் அல்லது உலக அளவில் ஏற்கப்பட்ட மருத்துவம் இந்தியாவுக்குள் வந்தது ஆங்கிலேயர்களால்.
சித்தம், ஆயுர்வேதம் போன்ற இந்தியப் பாரம்பரிய மருத்துவங்கள் அதிக அளவில் பயன்படுத்திய நமது இந்திய சமஸ்தானங்களில் நடப்பிற்கு இந்த தற்கால மருத்துவம் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது.
நீதிகட்சி ஆட்சிக்கு வந்த அதுவரை பார்ப்பனர் மற்றும் உயர் சாதி இந்துக்கள் மட்டுமே படிக்க முடியும் என்கிற மருத்துவ படிப்பை அனைவருக்கும் தந்தது நீதிகட்சி.
1930களில் சராசரியாக 32 வயது என்றிருந்த இந்திய குடிமகனின் உயிரை காப்பாற்றி இறப்பு விகிதத்தை குறைக்க ஆரம்பித்தது ஆங்கில வழி மருத்துவம் மட்டுமே.
அதேவேளையில் விடுதலைக்கு முன்பு மதராஸ் மாகாணத்தில் 5000 மேல் பள்ளிகளை மூடிய மூதறிஞர் ராஜாஜி கூறிய அற்ப காரணம் போதுமான நிதி இல்லை என்பதே. மறைமுகமாக குலக்கல்வியை ஊக்குவித்தார் ராஜாஜி.
சுருக்கமாக, தச்சர் மகன் தச்சனாக, படித்த குமாஸ்தாவின் மகன் படித்து குமாஸ்தாவாக, தோட்டி என்று கழிவுகளை அகற்றும் பணியாளின் வாரிசு மீண்டும் அதே தொழிலை, தினக்கூலயின் மகன் தினக்கூலியாக, அர்ச்சகர் மகன் அர்ச்சகராக அந்த வேலைகளை மட்டுமே செய்திட கொண்டுவரப்பட்ட திட்டம் தான் குலக்கல்வி திட்டம்.

பெரியாரின் துணையோடு ஆட்சிக்கு வந்த காமராஜர் செய்த மாபெரும் சாதனை மூடிய 5000 மேல் பள்ளிகளை மீண்டும் திறந்ததே. அடிப்படையை மிக பலமாக போட்டது காமராஜர் ஆட்சி ஆனால் அவருக்கு துணையாக காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இந்திய ஒன்றியத்தில் வலு சேர்த்தது.
பின்னர் ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கம் தான் அனைவருக்கும் கல்வியைக் கொண்டு போய் சேர்த்தது. அதன் நீழ்ச்சி தான் 24 அரசு மருத்துவ கல்லூரிகள். வேறெந்த இந்திய மாநிலத்திலும் காண முடியாத எண்ணிக்கை இது திராவிட இயக்கங்களால் குறிப்பாக திமுக தலைமையிலான ஆட்சியால் வந்த சாதனை.
இட ஒதுக்கீடு + அடிப்படை கட்டமைப்பு நமது வரிப்பணத்தைக் கொண்டும் சில இடங்களில் ஒன்றியத்தின் துணையோடு அமைத்து அதிக மருத்துவர்களை படிக்கவைத்த பெருமை திமுக மற்றும் அதற்கு பின்னால் அமைந்த அதிமுகவின் சாதனையும் கூட.
இறுதியாக 5கிமி ஒரு ஆரம்பப்பள்ளி, 10கிமி ஒரு உயர்நிலைப்பள்ளி என்று பல அரசு பள்ளிகளை திறந்தது 2006-2011 திமுக ஆட்சி.
இதுதான் 53 ஆண்டுகளாய் திராவிட கட்சிகள் செய்த சாதனை.
இந்த படத்தில் உள்ளதை நாம் எப்படி நோக்க வேண்டும்?
மக்கள் தொகையில் ஒவ்வொரு 1000 பேருக்கு மாநிலத்தில் எத்தனை படுக்கைகள் உள்ளன என்று கொடுக்கப்பட்டுள்ளது
மக்கள் தொகையில், மாநில பரப்பளவிலும் நம்மை ஒத்த மாநிலங்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, குஜராத், பஞ்சாப், அரியாணா, மேற்கு வங்கம், பீகார், ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திர பிரதேசம் போன்றவைகளை எடுத்துக்கொண்டால் நம்மை விட சில படுக்கைகளை அதிகமாக இருப்பது கர்நாடகா மற்றும் கேரளம் மட்டுமே. தமிழகம் 1.07 படுக்கைகள் ஒவ்வொரு 1000 பேருக்கு கர்நாடகா, கேரளா 1.14 படுக்கைகள் ஒவ்வொரு 1000 பேருக்கு.
சாதனைச் செல்வர் மோடியின் குஜராத்தை பின் தங்கிய மாநிலமாக கருதப்படும் உத்திரப்பிரதேசத்தோடு ஒப்பிட்டால் உபி ஒரு சில படுக்கைகள் அதிகம். குஜராத்தில்0.33, உபியில் 0.38. மிக பெரிய முன்னிலை மாநிலமாக கருதப்படும் மகராஷ்டிராவில் 0.46.
இதுதான் திராவிட இயக்கம் செய்த சாதனை. நாம் எங்கு நிறுகிறோம் என்று உணருங்கள்.
சங்கிள் சொல்வது என்னவெனில், இந்த சாதனைகளை செய்தவர்களுக்கு பெயர் திருட்டு திராவிடம், பள்ளிகளை மூடிய அரசியல்வாதிக்கு மூதறிஞர்.

கருத்துகள் இல்லை: