புதன், 25 மார்ச், 2020

கலைஞர் கட்டிய கொரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவ மனை

Thangam Thenarasu : தலைவர் கலைஞர் எழுப்பிய சட்டப்பேரவைக் கூடம்
உள்ளடக்கிய தலைமைச் செயலகப் புதிய கட்டடம் தற்போது 300 படுக்கைகளுடனான கொரொனா சிகிச்சை மருத்துவமனையாக இயங்குகிறது என்ற செய்தியைப் பலரும் பகிர்ந்திருந்தார்கள்.
அவரது வீட்டையே மருத்துவமனையாக்கிட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்த அவர் இன்றிருந்தால், தான் எழுப்பிய இந்த மாபெரும் கட்டடம் இன்று நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் கொரொனா சிகிச்சை மருத்துவமனையாக மாறி இருப்பதில் மகிழ்ச்சியே அடைந்திருப்பார்.
ஒரு நாள் திடீரென என்னிடத்தில் கேட்டார்.
“ என்னய்யா, மேலே இருக்கும் தளங்களில் எல்லாம் வேலை முடிஞ்சிருச்சா?”
“ முடிஞ்சிருச்சுங்கய்யா.. சில சின்ன வேலைகள் தான் பாக்கி”.
சம்பிரதாயமாகச் சொன்னேன்.
“ சரி, அப்போ வா! போய்ப் பார்க்கலாம்”
“ இல்லீங்க அய்யா, ஒரே தூசி..சுத்தம் பண்ணிட்டு நாளைக்குப் போகலாம்”
“ தூசிதானே..முகக்கவசம் போட்டுக்கிட்டா போச்சு.. வாய்யா”
யார் சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக மேல் தளத்தைப் பார்வையிடக் கிளம்பிவிட்டார்.
அவர்தான் கலைஞர்!
அப்படி அவர் பார்த்து பார்த்துக் கட்டியது தான் கொரானா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக இன்று உயிர் காக்க உதவுகின்றது

கருத்துகள் இல்லை: