செவ்வாய், 24 மார்ச், 2020

இன்று முதல் 21 நாட்கள்.. நாடு தழுவிய லாக்டவுன்.. மக்கள் ஊரடங்கை விட கடுமையானது: மோடி அறிவிப்பு


Veerakumar- /tamil.oneindia.com டெல்லி: மார்ச் 24ம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுக்க ஊரடங்கு அமலில் இருக்கும்
என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் பரவிவரும் நிலையில் இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது இந்த அதிரடி அறிவிப்பை அவர் வெளியிட்டார். தடுப்பதற்கு மூன்று வார கால சமூக விலகல் என்பது மிக முக்கியமானது. ஒவ்வொரு இந்தியரின் உயிரும் எனக்கு முக்கியம். எனவே உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன், ;21 நாட்கள் இந்த சமூக விலகலை நீங்கள் பின்பற்றுங்கள். 
A  யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்
B  21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்
C  இந்த ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதை அறிந்துள்ளேன்
D  பொருளாதாரம் பாதித்தாலும், நாட்டு மக்களின் உயிர்தான் எனக்கு முக்கியம் 
E  இந்த 21 நாட்கள் நாம் சுய ஒழுங்கைக் கடைபிடிக்காவிட்டால் 20 ஆண்டுகளுக்கு நாம் பின்னோக்கி சென்று விடுவோம் 
F  தனித்து இருப்பதை தவிர தப்பிப்பதற்கு வேறு வழி கிடையாது 
G சீனா, அமெரிக்கா, ஈரான் போன்ற நாடுகள் சமூக விலகலை, சரிவர பின்பற்றாததா தான் சிரமப்படுகின்றன.
H   அந்த நாடுகளில் இருந்து பெற்ற படிப்பினை மூலம் நாம் கொரோனாவைத் தடுக்கலாம் 
I  கொரோனா பரவத் தொடங்கினால் அதை தடுத்து நிறுத்துவது மிகப்பெரிய சவால் ஆகிவிடும் 
J  நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம், உங்கள் விருந்தினர் உள்ளிட்ட யாரையும் வீட்டுக்குள்ள அனுமதிக்கவும் வேண்டாம் 
K  இப்போது கடைபிடிக்கப்போகும் ஊரடங்கு என்பது, மக்கள் ஊரடங்கு (ஜனதா ஊரடங்கு) விடவும் கடுமையானதாக இருக்கும்.
L   மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், கிராமங்கள் உள்ளிட்ட அனைத்தும் லாக்டவுன் செய்யப்படும். இவ்வாறு, நரேந்திர மோடி தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: