வியாழன், 26 மார்ச், 2020

தூய்மை பணியாளரை அடித்து சாக்கடையில் தள்ளி ...


திருப்பதிசாய் : சென்னையில், தூய்மைப் பெண் பணியாளரை அடித்து உதைத்து சாக்கடையில் தள்ளிய மிருகங்கள்.
சோழிங்கநல்லூர் பகுதியில் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த ஒருவர், குப்பைகளை சரியாக சுத்தம் செய்யுமாறு பெண் பணியாளருக்கு கட்டளையிட்டிருக்கிறார். இதனால்,
அந்த நபருக்கும் பெண் பணியாளருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில், அந்த நபரும் அவரது மனைவியும் சேர்ந்து தூய்மைப் பணியாளரை அடித்து உதைத்து, அசிங்கமான வார்த்தைகளால் திட்டி சாக்கடையில் தள்ளிவிட்டுள்ளனர்.
தகவல் அறிந்த நமது செய்தியாளர், சோழிங்கநல்லூர் மண்டலம் 15 செயற்பொறியாளர் சுந்தரராஜை செல்போனில் அழைத்து புகார் கூறியபோது, அலட்சியமாக அழைப்பை துண்டித்துவிட்டார்.

கருத்துகள் இல்லை: