புதன், 20 மே, 2026

தமிழர்கள் இவ்வளவு முட்டாள்களாக மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை!

May be an image of text that says "முதல் ஐந்து கையெழுத்துகள்! -முதலைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு. CHIEF MINISTER அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக மே மாதமே ரூ.2000 வழங்கப்படும். -TNILK 16.5.2021 முதல் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறது. சா சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் மகளிர் அனைவரும் கட்டணமின்றி பயணிக்கலாம். 風 மக்களிடம் பெற்ற மனுக்கள் மீதான குறைகளை நிவர்த்தி செய்ய 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறை உருவாக்கப்படுகிறது. 5 கொரோனா பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம். f mK Stalin mkstalin m.k.stalin mkstalin mkstalin 07-05-2021"

 Swaminathan Poornachandran  :  எம்ஜியார் போல ஒரு நடிகர் தமிழ் நாட்டு முதல்வர் ஆவது என்பது இனிமேல் நடக்காத காரியம் என்று தான் நான் கடந்த 20-30 வருடங்களாக நினைத்திருந்தேன். 
காரணம், எல்லோருக்கும் பரவலான கல்வி. அந்தக் கல்வியால் மக்களுக்குக் கிடைத்த எக்ஸ்போஷரால், சினிமாவில் வருவதெல்லாம் நிஜ வாழ்வில் நடக்காது என்று உணர்ந்த ஒரு கற்றறிந்த தலைமுறை தான் இங்கு இருக்கிறது என்று எண்ணியது,  தவிர சினிமா என்னும் பொழுது போக்குத் தொழிலையும், அரசியல் என்ற மிக அத்தியாவசியமான செயல்முறையையும் படித்த இந்தத் தலைமுறையினர் குழப்பிக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தது. 
தவிர விஜயகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களின் தோல்வி, மற்றும் திமுக கூட்டணிக்குக் கிடைத்த தொடர் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள், பாஜகவை ஒதுக்கி ஒன்றுமில்லாமல் வைத்திருந்தது, ஆகியவை தமிழ்நாடு சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுத்தது. 


ஆனால், விஜயின் வருகை தான் இதெல்லாம் வெறும் பூச்சு என்பதையும், அடியாழத்தில் மக்கள் 70-80 களில் இருந்த கல்வியறிவு குறைந்த மக்களைவிட சிந்தனாசக்தி அற்றவர்களாக, கல்வியின் பலன் எள் முனையளவும் சிந்தனையை மேம்படுத்தாத மக்களாகத் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்ற உண்மையைச் செவிட்டில் அறைந்து சொல்லி இருக்கிறது. 
எம்ஜியாரைத் தேர்வு செய்ததில் கூட ஒரு நியாயம் இருக்கிறது. அவர் வெறும் நடிகராக மட்டும் இல்லை, ஒரு தத்துவத்தை, கொள்கையைத் தன் படங்களின் மூலம் பல ஆண்டுகள் பரப்பியவராக, நேரடி அரசியலில் பங்கு பெற்றவராக, அரசு இயந்திரத்தை அருகில் இருந்து பார்த்தவராக, அனுபவம் பெற்றவராக இருந்திருக்கிறார்.  அவருடன் அனுபவசாலிகளும் உடன் இருந்தார்கள். அவரால் ஒரு அரசைத் திறம்பட நிர்வாகம் செய்ய இயலும் என்று மக்கள் நம்பியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஜெயலலிதாவுக்கும் கட்சியில் ஆட்சியில் அனுபவம் இருந்தது. வெறும் சினிமா நடிகை என்று மட்டும் சொல்லி விட முடியாது. கொபசெவாக நியமித்ததில் ஆரம்பித்து, அரசியலில் கொஞ்சமாவது அனுபவம் பெற்றவராக, அரசியல் அறிந்தவர்களால் அரசியல் கற்பிக்கப் பட்டவராக இருந்தார். 
ஆனால், பிரச்சாரம் செய்யக்கூடப் பொறுப்பில்லாமல் லீவு எடுத்துக் கொண்டு வீட்டில் படுத்துகொண்டிருந்த ஒருவரை, ஆறு மணிக்கு மேல் வெளியே காணவே இயலாத ஒருவரை, 20 தொகுதிக்கு மேல் மக்களைச் சென்று சந்திக்காத ஒருவரை, வேட்பாளர்களாக அதிக பட்சமாக கிரிமினல்களையும்,  பொய்யர்களையும், சுத்தமாக அரசு இயந்திரம் என்றால் என்ன, அரசியல் என்றால் என்ன என்றே அறியாத தற்குறிகளையும் நியமித்த ஒருவரால் அரசை நடத்த முடியும் என்று நம்பி இந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்களே, அதுவும் கடந்த 106 வருடங்களில் தமிழகம் காணாத மிகச் சிறந்த அரசை நடத்தியவர்களைத் தூக்கி எறிந்து வாக்களித்திருக்கிறார்களே, இந்த மக்களை என்ன சொல்வது?  
சத்தியமாக இவ்வளவு முட்டாள்களாக இந்த மக்கள் இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! இவர்களுக்குக் கல்வி என்ன தான் செய்தது என்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிற

கருத்துகள் இல்லை: