புதன், 4 மார்ச், 2020

பார்ப்பனர்கள் இந்து அறநிலையத்துறை பற்றி பொய்களையே மீண்டும் மீண்டும் பரப்புகிறார்கள்.

Krishnavel T S : கோயில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என சொல்லிவந்த ஹிந்துத்துவா கும்பல், இப்போது மத்திய அரசின் கீழே இருக்கும் தொல்லியல் துறைக்கு கோயில்கள் செல்வதை வரவேற்கிறது.. இதிலிருந்து என்ன புரிகிறது என்றால், தமிழ்நாட்டில் சமூக நீதியின் அடிப்படையில் கோயில் நிர்வாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின ஹிந்துக்களை துரத்திவிட்டு, இங்கெல்லாம் வடநாட்டு உயர்சாதி பார்ப்பனர்களை பணியில் அமர்த்த இந்த பார்ப்பனிய அடிமை கும்பல் ஆதரவு தெரிவிக்கிறார்கள்..
அப்படி என்றால் இத்தனை நாட்களாக இவர்கள் சொல்லிவந்த, அரசே கோயில்களிலிருந்து வெளியேறு.. என்ற கோஷம் பொய்யானது.. சூத்திர பஞ்சம இந்துக்களை வெளியேறுங்கள்... கோயில்களை பார்ப்பனர்களிடம் ஒப்படையுங்கள் என்பதுதான் அவர்களின் கோஷம்..
பார்பனர் கோயில் பணத்தை கொள்ளை
அடிப்பதை தடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு துறையை பற்றி, நம் தமிழ் நாட்டில் பலர் இன்னமும் கோயிலில் வசூலாகும் கோடிக்கணக்கான பணம் தமிழக அரசுக்கு தான் வந்து விடுகிறது என்று தவறாக பொதுமக்களின் மண்டையில் ஏற்றியது தான் உண்மையான பார்பன புரட்டு.
பல வருடமாக இந்து அறநிலையத்துறை பற்றி இல்லாத ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பார்பனர் சொல்லிவருகின்றனர், மக்களும் அறியாமல் நம்பி வருகின்றனர்.

இன்னும் போதாகுறைக்கு இந்தத்துறையில் கோயில் நிர்வாக அதிகாரி பணிக்கு, இந்துவாக பிறந்த யாரும் பட்டப்படிப்பு முடித்து ஒவ்வொரு வருடமும் TNPSC Group VII தேர்வு எழுதி வெற்றிபெற்றால் தமிழக அரசின் 69% இடஒதுக்கீட்டின் படி இந்த பணியில் அமரலாம், பார்பன பூசாரிகள் அந்த அதிகாரி எந்த சாதியாக இருந்தாலும் அவருக்கு கைகட்டி பதில் சொல்லி ஆகவேண்டும் என்பது தான் பார்பனருக்கு இன்னமும் எரிச்சல்.
இன்னமும் நம்பிக்கை இல்லையென்றால், இந்து அறநிலையத்துறை அலுவலகத்துக்கு பத்து ரூபாய் பணம் கட்டி RTI-சட்டத்தின் கீழ் இந்த வருடம் உங்கள் துறையின், நிகர லாபம் என்ன என்று கேட்டு மனு அனுப்புங்கள்
அங்கிருந்து, இத்துறை ஒரு கண்காணிப்பு துறை இங்கு லாபம் என்று எல்லாம் எதுவும் கிடையாது என்று பதில் வரும்.
இதையெல்லாம் தாண்டி அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, இனி இந்த துறை மூலம் பயிற்சி கொடுக்கப்பட்டு, சாதி வித்தியாசம் இல்லாமல் இறை பணி செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும், அதாவது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டுவந்தது தான் பார்பானின் வெறி உச்சிக்கு ஏரிய தருணம்
இன்னும் ஒன்றை சொல்லவேண்டும் என்றால், கிருஸ்துவ, இஸ்லாமிய மற்றும் பிற மதத்தினர் செலுத்தும் வரிப்பணத்தில் இந்து கோயில் சொத்துகள் பாதுகாக்கப் படுகிறது. வெறும் இந்துகளின் பணத்தில் மட்டுமே அல்ல.
உண்மை இப்படி இருக்க, திராவிட கட்சிகள் கோயில் பணத்தை அரசாங்கத்தின் மூலம் கொள்ளை அடிப்பது போன்ற எண்ணத்தை பொதுமக்கள் மனதில் ஏற்றியது தான் உண்மையான பார்பன புரட்டு.
இன்றும் Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act XXII of 1959 சட்டத்தின் படி யார் வேண்டுமானாலும் ஒரு தனிப்பட்ட இந்து வழிபாட்டு மையத்தை தொடங்கலாம் நடத்தலாம்
ஆனால் அங்கே உண்டியல் வைத்தாலோ, டிக்கட் மூலம் அர்ச்சனை, சிறப்பு நுழைவு கட்டணம் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்தால், அது பொதுமக்களுக்கு சொந்தமான கோயில் என்று கணக்கில் கொண்டுவரப்பட்டு, இந்து அறநிலையத்துறை கண்காணிப்பில் (கட்டுப்பாட்டில் அல்ல) வந்துவிடும்
இதனால் தான் பார்பான் தன் விஷ வன்மத்தை கருணாநிதி மேலும் திராவிட இயங்கங்கள் மேலும் பரப்பிகொண்டே இருக்கிறார்கள் .
அவ்வை சன்முகியில், வருவது போல சொல்லவேண்டுமென்றால், இந்த துறையும் திராவிட இயக்கங்களும் இருப்பதால் சேதுராமையர் போன்றவர்களால் கவுஸிமாமி கூட சேர்ந்துகிட்டு வெள்ளி குத்து விளக்கு திருட முடியவில்லை, அதனால் தான் இந்த கூப்பாடு..
நன்றி: Krishnavel T S

கருத்துகள் இல்லை: