சனி, 7 மார்ச், 2020

தமிழகத்தில் வடநாட்டவர் .. அதிர்ச்சி அளிக்கும் விபரங்கள் ..

Vaa Manikandan : தமிழகத்தில் எந்த ஊரிலும் ஹார்டுவேர் கடைகளை
வடநாட்டவர்கள்தான் நடத்துகிறார்கள்.
ஊத்தங்கரை, ஜெகதேவி போன்ற கிரானைட் கிடைக்கும் இடங்களில் இருக்கும் 90% வியாபார நிறுவனங்கள் வடக்கத்தியார்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
பெருந்துறை, ஓசூர் மாதிரியான தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதிகளில் குறைந்தது பதினைந்தாயிரம் வடநாட்டு வாக்காளர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தின் எந்த ஊரிலும் இரவு நேர பானிபூரி கடைகள் அனைத்தையும் பீடாக்காரர்கள்தான் நடத்துகிறார்கள்.
சாலையோரங்களில் குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாமான்களை விற்பவர்கள், ஆங்காங்கு பட்டறை போட்டு கத்தி, அரிவாள் விற்பவர்கள் என சகல இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் அவர்கள்தான். கோவையிலிருந்து சென்னை கிளம்பும் எந்த ரயிலின் பதிவு செய்யப்படாத பெட்டிகளும் வட மாநிலத்தவர்களால் மட்டுமே நிரம்பியிருக்கும்.
கூலித் தொழிலாளர்கள், கட்டிட வேலை செய்கிறவர்கள் என அவர்கள் இல்லாத இடங்களே இல்லை. ‘

சென்னை எரியும்’ என்று வெகு இயல்பாக அவர்கள் பதாகையைத் தாங்கி நிற்கவில்லை என முழுமையாக நம்பலாம்.
அவர்கள் எரிக்க வேண்டும் என நினைத்தால் எரித்துவிட முடியும்.
தேவையான பலத்தை ஏற்கனவே அவர்கள் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு அவசியமானதெல்லாம் ஒருங்கிணைப்பு மட்டும்தான்.

கருத்துகள் இல்லை: