சனி, 7 மார்ச், 2020

பேராசிரியர் : ஒரு பேப்பரையும் ஒரு பேனாவையும் வைத்து கொண்டு .....

கண்ணன் இரா :; 1977 கழகம் தோல்வியை தழுவிய நேரத்தில் கழகத்திலிருந்து பொதுச்செயலாளர் நாவலர் பஉச சி.பி.சிற்றரசு செ.மாதவன் உள்ளிட்ட பலர் வெளியேறியபோது
அடுத்த பொதுச்சயலாளரை தேர்வு செய்ய தஞ்சையில் நடந்த பொதுக்குழுவுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன்.
பொதுச்செயலாளராக தேர்வானார்.
பொதுக்குழு முடிந்த பின் பொதுக்குழு தீர்மான விளக்கம் கூட்டத்தில் பேராசிரியர் பேசினார்.
நான் யாருக்கும் குறைந்தவன் அல்ல என்ற எண்ணம் கொண்டவன் ஏன் அகம்பாவம் உள்ளவன்.
அப்படிப்பட்ட நான் கடந்த ஓராண்டாக தமிழக அரசியலை கழகத்தின் நிலைபற்றி யெல்லாம் உண்ணிப்பாக கவனித்து வந்தேன்.
ஒரு பேப்பரை ஒரு பேனாவையும் வைத்துக்கொண்டு ஒரு மாபெரும் இயக்கத்தை கட்டிக்காத்த கலைஞரை பார்த்து வியந்து பார்த்து அவரின் கீழ் பணியாற்றுவதென்று முடிவுசெய்துவிட்டேன்.
அவர் கண்கள் கலைக்கண்கள் அந்த கண்ஒளியின் வெளிச்சத்தில் கழகப்பணியாற்றுதென்று முடிவெடுத்தேன் என்றார்

கருத்துகள் இல்லை: