புதன், 4 மார்ச், 2020

ஜோர்ஜியாவுக்கு செல்லும் இலங்கை மாணவர்கள் ஏமாற்றப் படுகின்றார்கள்!

add
Bill/tamil.theleader.lk: ஜோர்ஜியாவுக்கு கல்வி பயில்வதற்காக அனுப்பப்படும் இலங்கை மாணவர்களை ஏமாற்றி  அதிக பணம் அறவிடப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.
ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்தில் இருக்கும்போது இலங்கை மாணவர்கள் பலர் அங்கு சென்று நல்ல நிலையில் கல்வி கற்று வந்துள்ளார்கள் ஆனால் நிலைமை இப்போது வேறாக உள்ளது தற்போது இலங்கை மாணவர்கள் ஜோர்ஜியாவில் பல துறைகளில் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஜோர்ஜியா வெளிநாட்டமைச்சு வெளிநாட்டு வருமானமாக ஒரு மாணவனிடமிருந்து  7500 டொலர் அறவிடும் நிலையில் இலங்கை மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக ஏமாற்றி  மேலும் 6000 அமெரிக்க டொலர்கள் அறவிடுவதாகவும் தெரிய வருகின்றது.  கல்வி அமைச்சால் அனுமதிக்கப்பட்ட தொகை 2750 அமெரிக்க டொலர்களாகும்.


ICAME education centre  அறவிடும் ஆகக்கூடிய தொகை 100 அமெரிக்க டொலர் எனவும் ICAME education centre   விடுத்துள்ள அறிக்கையிள் அரச பல்கலைக்கழகங்களினூடாக ஆசிரியர் குழு ஒன்று இந்தக்கொல்லையில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது.

ஜோர்ஜியாவின் அரச அதிகாரிகள் கூருகையில் இது சம்பந்தமாக இலங்கை அரசாங்கம் ஆராய வேண்டும் எனவும் மாணவர்கள் ஏமாற்றப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: