சனி, 7 மார்ச், 2020

கொரோனா வைரஸ் 6 மாநிலங்களில் பரவ வாய்ப்பு

மாலைமலர் : கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த 6 மாநிலங்களும் விழிப்புடன் செயல்பட்டு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. புதுடெல்லி:
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர 13 ஈரானிய சுற்றுலா பயணிகள் அமிர்தசரஸ் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளையும் விமான நிலையங்களில் வைத்தே மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. இதில் கொரோனா அறிகுறி தெரிந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்காளம், பீகார், உத்தர காண்ட், உத்தரபிரதேசம், பஞ்சாப், சிக்கிம் ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து அதிகம் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் இந்த 6 மாநிலங்களும் விழிப்புடன் செயல்பட்டு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக 6 மாநிலங்களிலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் செய்யக்கூடாதவைகளை பட்டியலிட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சிக்கிம் மாநிலத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் ஓட்டல்கள் அனைத்தும் முன்பதிவை ரத்து செய்துள்ளன

கருத்துகள் இல்லை: