புதன், 4 மார்ச், 2020

.இந்தியன் 2 விபத்து : "கமல்ஹாசனை விசாரணைக்கு அழைப்பதா?" - மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம்

தந்திடிவி : இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், விபத்து நடந்த தளத்தில் இருந்து சில நொடிகளுக்கு முன்பு தான் கமல்ஹாசன் அந்த இடத்தில் இருந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சியை பிடிக்காத தமிழக அரசு, காவல்துறை மூலம் சாட்சி என்ற பெயரில் அவரை அழைத்து 3 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், அறிக்கையில், கூறப்பட்டுள்ளது.

முகநூல் : மூன்று உயிருக்கு மூணு மணிநேரம் கூட உன்னிடம் விசாரிக்க
கூடாதா.. கமலஹாசா? . அறிக்கை  விடுகிறார் மக்கள் நீதி மையமாம் ... இதுக்கு பேர் மய்யம் அரசியலாம். தன்முனைப்பு மட்டுமே என்று வாழும் சினிமா பட நாயகர்களுக்கு தான் மட்டும் தான். மற்றது எல்லாம் துச்சம்...
கூடவே இன்னொரு தகவல். கமல் lyca விடம் கைநீட்டி சபாஷ் நாயுடுக்கு வாங்கி, நடிக்காமல் அபேஸ் செய்த பணத்தை, அவர்கள் இந்தியன்-2 சம்பளத்தில் அட்ஜஸ்ட் பண்ண சொல்லியதாலும் இவர் வேலைய காட்டறார்.

கருத்துகள் இல்லை: